உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பற்றிய எண்ணங்களை பகிருங்கள்: பக்தர்களுக்கு கோயில் அறக்கட்டளை அழைப்பு

ராமர் பற்றிய எண்ணங்களை பகிருங்கள்: பக்தர்களுக்கு கோயில் அறக்கட்டளை அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: ராமர் கோயில் மற்றும் கும்பாபிஷேகம் பற்றிய எண்ணங்களை ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இதற்காக உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மதத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, பக்தர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வீடியோ வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமர் தனது உரிமையான வசிப்பிடத்திற்குத் திரும்புவது பிரபஞ்சத்தை இணையற்ற உணர்ச்சிகளால் நிரப்புகிறது. அவரது வரவேற்பின் மகத்துவத்தை அதிகரிக்க, உலகெங்கிலும் உள்ள அனைத்து ராமபக்தர்களும் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் #ShriRamHomecoming என்ற ஹேஸ்டேக் உடன் தங்களது முழுப்பெயர், இருப்பிடம் மற்றும் தங்களை பற்றிய தனிப்பட்ட குறிப்பை சுருக்கமாக குறிப்பிட்டு பதிவேற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஜன 16, 2024 23:58

இந்த நல்ல நேரத்தில் மீண்டும் அந்த 'ராமாயணம்' தொலைக்காட்சி தொடர் எல்லாமொழிகளிலும் ஒளிபரப்பப்படவேண்டும்.


Balasubramanian
ஜன 16, 2024 19:53

குலசேகர ஆழ்வார் திவ்யப் பிரபந்தம் - முதலாம் ஆயிரம் பெருமாள் திருமொழி பாசுரம் -'741 அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே அழகிய உயர்ந்த மதில்களினால் சூழப்பட்ட அயோத்தி மாநகரில், உலகுக்கு சோதியாய் விளங்கும் சூரிய குலத்தில் மணி விளக்காக தோன்றி, வானில் வாழும் தேவர்கள் துயர் துடைத்து வாழச் செய்த, மாவீரனும், சிவந்த கண்களை உடையவனும், கருமுகிலைப் போன்ற வண்ணமுடைய இராமனை, எங்கள் முழு முதல் கடவுளை, தில்லை சித்திரக் கூடத்தில் கண் காணும் நாளும் எந்நாளோ?என்று பாடிப் பரவசமாகிறார் அத்தகைய இராமனை நாம் அயோத்தி மாநகரிலேயே காணமுடியும் என்றால்? நினைத்தாலே மனம் விம்முகிறது காணக் காத்திருக்கிறோம் ஜெய் ஸ்ரீ ராம் ????


g.s,rajan
ஜன 16, 2024 19:00

மனிதப் பிறவியில் எளிமையாக வாழ்ந்து காட்டிய ராமரை வியாபாரமாக்கிட்டீங்களே,இது நியாயமா ...???


T.sthivinayagam
ஜன 16, 2024 18:33

அர்ச்சகர்ஆக இறை பணி செய்ய பங்களித்த அனைத்து ஹிந்துக்களையும் நியமிக்க ஹிந்துக்கள் விரும்புகின்றனர்


Muthu Kumar
ஜன 16, 2024 15:29

அவதார புருஷன் ஜெய் ஸ்ரீ ராம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை