உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங்... ராஜ்யசபா எம்.பி.,... அரசியலுக்கு வந்தது எப்படி?

மன்மோகன் சிங்... ராஜ்யசபா எம்.பி.,... அரசியலுக்கு வந்தது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜ்யசபா எம்.பி.,

நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்தவர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேருவுக்கு பின், முழு ஆட்சி காலத்தை நிறைவு செய்த பின், மீண்டும்பிரதமரானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். நேரு, இந்திரா, நரேந்திரமோடிக்குப் பின், நீண்ட கால பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பொருளாதார நிபுணராக இருந்து, அரசியலுக்கு வந்த அவர், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த, 1991 - 2019 வரை அசாமில் இருந்தும், 2019 - 2024 வரை ராஜஸ்தானில் இருந்தும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் லோக்சபா தேர்தலில், ஒருமுறை கூட போட்டியிட்டதில்லை.

அரசியலுக்கு வந்தது எப்படி?

தான் அரசியலுக்கு வந்தது தொடர்பாக, 2005ல் பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் டுல்லிக்கு அளித்த பேட்டியில், மன்மோகன் சிங் கூறியதாவது:கடந்த, 1991 ஜூன் மாதம், காங்கிரசின் நரசிம்ம ராவ் பிரதமராக பதவியேற்றபோது, என்னை நிதி அமைச்சராக தேர்வு செய்தார். இந்தத் தகவலை எனக்கு தெரிவிக்க, முதன்மை செயலரை அனுப்பியிருந்தார். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் காலையில், நரசிம்ம ராவே என்னை அழைத்தார். நல்ல உடை அணிந்து, உடனே ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி கூறினார். இப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rama
டிச 27, 2024 14:09

1991 இல் இந்தியா எப்படி இருந்தது என்பதை அறிந்திடாதவர்கள் புரிந்திடாதவர்கள் தான் இவரை திட்டுவார்கள் ஐம்பது சதவிகிதத்திர்கும் மேல் உள்ளவர்கள் வறுமையில் வாடிய தருணம் அது இன்று பலரும் வறுமையில் இருந்து மீண்டுள்ளானார் என்றால் அதற்கு இவரின் தொலைநோக்கு பார்வை பொருளாதார கொள்கை ஒன்று மட்டுமே காரணம் நன்றி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இவரை திட்டி பாவி ஆகாதீர்கள்


பாரதி
டிச 27, 2024 10:09

அவர் முன்பு அமெரிக்காவின் வளர்ச்சிக்காக அமெரிக்காவில் பதவிகளில் இருந்து ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்தவர் என்பதை ஊடகங்கள் சொல்ல மறுப்பது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இறந்த பிறகு குறை சொல்ல வேண்டாம் என்பதல்லோ என்னவோ


Rama
டிச 27, 2024 14:42

அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது ? அப்போது இவர் இந்திய அரசியல்வாதி இல்லையே . இவரின் திறைமையை அப்போதே உணர்ந்த அமெரிக்காவிற்கு வேலை பார்த்துள்ளார் . அமேரிக்கா அவரை பயபப்டுத்திய தால்தான் அவர் திறமை நமக்கே தெரிந்து இங்கு கூட்டி வந்தோம் . நாம்தான் திறமையானவர்களை வளரவிட மாட்டோமே


ஆரூர் ரங்
டிச 27, 2024 10:05

இந்திரா மாதிரியே மக்கள் வாக்கைப் பெறாமல் புறவாசல் ராஜ்யசபா. வழியே பிரதமராக ஆனவர்?


Sridhar
டிச 27, 2024 10:00

உலக வங்கியின் திட்டங்களை செயலாக்க அவர்கள் இதுபோன்ற ஆட்களை ஒவ்வொரு நாட்டிற்கும் தயார் செய்து ஒட்டிவிடுவார்கள் மேலாக பார்க்கும்போது கேம்பிரிட்ஜ் oxford னு பெரிய படிப்பு படிச்ச மேதைகள் மாதிரி தெரியும். ஆனால் அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் கூட ஒழுங்காக தெரியாது. இதனால் இந்தியா அனுபவித்த வேதனைகள் ஏராளம்


Barakat Ali
டிச 27, 2024 09:54

ஒரு நாட்டை ஊழலால் நாசப்படுத்த வேண்டும் என்று இறைவன் கருதினால் அதற்கான கருவிகளைத் தேர்ந்தெடுப்பான். இவரை வைத்து இக்கூற்று உண்மைதான் என்று புரிந்து கொள்ளலாம் ....


Nallavan
டிச 27, 2024 07:46

இந்திய பொருளியல் வல்லுனர்களில் ஒருவர், மேனாள் RBI கவர்நர், திறமைவாய்ந்த இருமுறை இந்திய பிரதமர், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்


Balaji
டிச 27, 2024 07:19

பங்களாதேசுக்கு ஒரு முஹம்மது யூனிஸ்.. இந்தியாவிற்கு இவர்.. பங்களாதேஷ் அழிவின் விளிம்பில்.. டிரம்ப் வந்தபிறகு நிலை மாறும் என்று நினைக்கிறேன்.. இந்தியா தப்பியது அதன் தனித்துவத்தைக் காட்டுகிறது..


M S RAGHUNATHAN
டிச 27, 2024 05:55

ஒரு முறை சவுத் டெல்லியில் 1996இல் போட்டி இட்டு தோல்வி அடைந்தார்.


A Viswanathan
டிச 27, 2024 10:50

நரசிம்ம ராவ் மூலம் அரசியலுக்கு வந்தவர் கடைசிவரை கோழையாய் இருந்தவர்.


CHELLAKRISHNAN S
டிச 27, 2024 12:04

correct. once he coned for lok Sabha but lost. he had a record that only prime minister who was never a lok Sabha member


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை