உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ்; மோகன் பாகவத்

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ்; மோகன் பாகவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'ஆர்எஸ்எஸ் உலகின் மிக பெரிய அமைப்பு. அதே நேரத்தில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்புகளில் ஒன்று' என்று அதன் தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரளாவுக்கு 3 நாள் பயணமாக அதன் தலைவர் மோகன் பாகவத் வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; ஆர்எஸ்எஸ் உலகின் மிக பெரிய தன்னார்வ அமைப்பு. அதே நேரத்தில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்புகளில் ஒன்று. சீருடை அணிந்த அமைப்பினர் நடத்தும் அணிவகுப்புகளின் காரணமாக இந்த அமைப்பு வெளியாட்களுக்கு ஒரு துணை ராணுவ அமைப்பாக தெரியலாம். பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகளை ஊக்குவிப்பதால் உடற்பயிற்சிக் கூடமாகவும் தோன்றலாம். எங்கள் செயல்பாடுளில் 100வது ஆண்டில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். அதே சமயத்தில் மீண்டும் மக்களை சந்தித்து சங்கம் குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த அமைப்பை நாம் பெரும்பான்மையான தருணங்களில் ராஜாராம் மோகன்ராயுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறோம். நாடு முழுவதும் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவதே இதன் நோக்கமாக இருந்தது. சமுகத்தின் எந்த ஒரு பிரிவினருக்கோ, எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ எதிரானது அல்ல. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெகதீசன்
ஜூன் 14, 2026 12:41

ராஜா ராம் மோகன் ராயை குறிப்பிடீங்க. அவர் பிரம்ம சமாஜத்தை நிறுவி, சிலை வழிபாடு, சடங்குகள், சாதி வெறி மற்றும் பழமைவாதங்களுக்கு எதிராகச் செயல்பட்டார். இதை ஏற்கிறோமா?


அப்பாவி
ஜூன் 14, 2026 08:31

மக்கள் புரிதலை நீங்க தவறாக புரிஞ்சிட்டிருக்கீங்க


nisar ahmad
ஜூன் 13, 2026 22:24

ஆம் தவறாக புத்தியில்லாதவர்களால் புறிந்து கொள்ளப்பட்டதால் தான் உலகின் மிகப்பெறிய தீவிரவாத இயக்கமாக மாறியுள்ளது.


V S Venkataramani
ஜூன் 13, 2026 21:13

உண்மை. தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்கள் இந்த இயக்கத்தை பற்றி. நமது சொந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதியவர்கள்ளுக்கு இது எம்மாத்திரம்.


Priyan Vadanad
ஜூன் 13, 2026 20:41

ஆமாமா. மேற்கு வங்கத்தில் இவிஎம் மெஷின்கள் எரிக்கப்பட்டதை ஏனென்று கேட்க வக்கில்லாத ஒரு நல்ல இயக்கம் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட இயக்கம்தான்.


கோபாலன்
ஜூன் 13, 2026 19:53

மிஷனரிகள் மற்றும் அவை உருவாக்கிய சோனியா காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் ஆர்எஸ்எஸை தவறான பொருளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள்


குமார்
ஜூன் 13, 2026 19:38

உண்மை. கட்டுக்கோப்பான அமைப்பு இது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர் கட்சினர் இதை தவறாக மக்களிடம் சித்தறிக்க முயல்கின்றனர்.


SULLAN
ஜூன் 13, 2026 19:29

ஒரு மனுசன் பொய் பேசலாம்..ம் ..அதுக்காக ஏக்கர் கணக்குல அளந்து விட கூடாது.


இறைவி
ஜூன் 13, 2026 19:59

பொய் சொல்வது மட்டுமே திராவிட கழகங்களின் நிரந்தர வேலை. பொய்களையே சொல்லி, பொய்களையே பரப்பி, என்றென்றும் பிரிவினை வாதங்களை மட்டுமே தூண்டி விட்டு அரசியல் செய்வது இந்த திராவிட கட்சிகளுக்கும் அதன் அடி வருடி கட்சிகளின் முழு நேர வேலை. அந்த பொய்களையும் இருநூறு ரூபாய்க்கு முட்டு கொடுப்பது அடிமைகளின் தொழில். ஆர்எஸ்எஸ்இன் சரித்திரத்தை முழுமையாக படிக்கவும். பின்னர் கருத்து எழுதவும்.


முக்கிய வீடியோ