வாசகர்கள் கருத்துகள் ( 35 )
அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஒருகமிஷன் போடுறீங்க... ஆனால் கமிஷன் வாங்கியே பணம் சேர்க்கிற இவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு எந்த கமிஷனும் கிடையாதா? எம்.பி.க்களின் சம்பளத்தை அவர்களே உயர்த்திக்கொள்வது எந்தவகையில் நியாயம்? சம்பள உயர்வு வழங்கும் அளவுக்கு எம்.பி.க்கள் என்ன சாதிக்கின்றனர். இவர்கள் ஆண்டால் அவர்கள் முடக்குவது, அவர்கள் ஆட்சியில்இவர்கள் முடக்குவது... இது தானே நடக்கிறது. இந்த சம்பள உயர்வு வேண்டாம் என எந்த எம்.பி.யாவது சொல்வாரா?
தமிழக எம் பி களுக்கு இந்த சம்பள உயர்வு தேவையா?
மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பார்லிமெமென்ட் மற்றும் சட்டமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்கள் அவர்களுக்கு தேவையான சம்பளம் இதர சலுகைகள் பென்ஷன் போன்றவற்றை ஆளும் அரசால் உடனே தேவையான அளவு உயர்த்தி கொடுக்க முடிகிறது. பல லட்ச கணக்கான தனியார் நிறுவனங்களில் 30-40 வருடங்கள் பணிபுரிந்து இன்னும் பென்ஷன் என்னும் பெயரில் 1000, 2000 ரூபாய்க்கு கீழ் வாங்கி கொண்டிருப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு குறைந்தபட்ச பென்ஷனை உயர்த்தி வழங்கினால் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை தரம் உயரும். மத்திய அரசுதான் கவனிக்க வேண்டும்.
பாவம் ஏழை தாயின் பிள்ளைகள் சம்பள உயர்வு தப்பில்லை பஸ்ல கூட வர காசு இல்லை போல
ஏனைய்யா இந்த மாதிரி செய்தி எல்லாம் வெளியிட்டு எங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறீர்கள்
பல மாநிலங்களின் MLA சம்பளத்தை விட குறைவுதான்
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எதிர்க்கிறேன் யாராவது வழக்கு தொடர வேண்டும் நம் வரிப்பணம் வீணாகிறது
மக்கள் வரிப்பணம் பறிபோகிறது
"எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது." பொதுவாக இவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளதாகச் சொல்லிக்கொள்வதால் இவர்களுக்கு சம்பளம் தருவதே நியாயமல்ல. அதிலும் இப்படி ஒரு அரசு ஊழியர் போல அனைத்துஸ் சலுகைகளும் தருவது ஒரு வகையில் லஞ்சம் தருவது போலத்தான் ஒட்டுமொத்தமாக சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாட்டின் குறைந்த பட்ச வருமானம் என்னவோ அது மட்டுமே வழங்கப்பட வேண்டும் எந்த வகையிலும் ஆட்சி செய்வது அதிகாரிகளே எனவே உறுப்பினர்கள் மக்கள் குறைகளை அரசு அதிகாரிகளிடம் சேர்க்கும் தூதராக மட்டுமே இருக்க வேண்டும் அப்படி அமையுமானால் மக்களுக்காக உண்மையில் சேவை செய்யும் எண்ணம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பார்கள் நாடு உருப்படும் செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் உருவாக மாட்டார்கள்
ஒரு இடத்தில கூட லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை ...இதற்கு மூல காரணமே அரசியல் வாதிகள் தான் ...மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு ஆடம்பரமாக வாழ்கிறார்கள் ....என்று மாறுமோ நம் நாடு