வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ரெண்டு ஜிலேபி சாப்பிட்டு நாலு சர்க்கரை மாத்திரை சாப்பிடும் நபர்களும் உண்டு. பசித்தால் சாப்பிடு நேர நேரத்திற்கு சாப்பிட்டு உழைக்காமல் இருந்தால் வீடு மருத்துவமனையாகிவிடும்.
படத்தில் இருப்பது ஜிலேபி அல்ல ஜாங்கிரி. வெறும் உளுந்து மாவுதான். ஒண்ணும் பண்ணாது. அதுக்குன்னு மூட்டை கணக்கில் சாப்பிடக் கூடாது.
புகைபிடித்தல், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு என்று அச்சிடப்பட்டு அதை விற்பதும் மானக்கேடு. இதென்ன பெருமையான சட்டம். பிறகு இவற்றால் வரும் நோய்களுக்கு அரசு மருத்துவமனைகள் வேற. பணத்தை கொடுத்து நோயின் வலியை வாங்கும் மக்கள் இலவச மருத்துவம் செய்து நல்ல பெயரை வாங்கும் அரசாங்கம். வேடிக்கையாக இருக்கின்றது சாமி
இனிப்பு மற்றும் அதிக உப்பு ஆபத்தானது. இனிப்பை குறைத்தால் கூடுதலாக 20 ஆண்டுகள் வாழலாம். உடல் உழைப்பு, 5-8 மணி நேர ஒய்வு, கவலையின்மை ஒருவனை அதிக நாள் வாழவைக்கும்.
கொழுப்பு சத்து நிறைய உள்ள பர்கர், பிஸ்சா, நுடில், பரோட்டா முதலிய உணவுகளுக்கும் ஏச்சரிக்கை அறிவிப்பு தேவை.
சிகரெட்டில் போடாத எச்சரிக்கையா? இந்தியர்கள் எந்த எச்சரிக்கையும் கண்டுகொள்ள மாட்டார்கள். , இனிப்பு தின்பண்டங்கள், பெப்சி, கோக், எண்ணையில் பொறித்த பக்கோடா, வடை, என்று அனைத்திற்கும் இருநூறு சதவீதம் வரி போடுங்கள். அது மட்டுமே தான் ஒரே தீர்வு. பணமில்லாமல் வறுமையில் இருந்தபோது இந்தியர்கள் ஹெல்தியாக இருந்தார்கள். இப்போது இருபது வயதில் சர்க்கரை நோய் வந்து, தொந்தி தள்ளி நடக்க முடியாமல் உள்ளார்கள். சைக்கிளுக்கு வரியை முற்றிலும் குறைத்து, கார், பைக்கிற்கு நூறு சதவீதம் வரியை ஏற்றுங்கள்.