உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நட்பு நாடுகள் உதவியுடன் நிமிஷா பிரியாவை மீட்க முயற்சி: வெளியுறவு அமைச்சகம்

நட்பு நாடுகள் உதவியுடன் நிமிஷா பிரியாவை மீட்க முயற்சி: வெளியுறவு அமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்ற நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா,36. ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் பணியாற்றினார். அப்போது நிமிஷா பிரியாவுக்கு தலால் தொல்லை கொடுத்துள்ளார். 2017 ல் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார். அதில், மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இது மிகவும் முக்கியமான விஷயம். வழக்கிற்கு தேவையான உதவிகள இந்திய அரசு அளித்து வருகிறது. சட்ட ரீதியிலான உதவியையும், குடும்பத்துக்கு உதவ வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிமிஷா பிரியாவுக்கு தூதரக உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து குடும்பத்துடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்கிறோம்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படுத்த நிமிஷா குடும்பத்துக்கு கூடுதல் நேரம் ஏற்பாடு செய்து கொடுத்தோம். இதனால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உள்ளூர் அதிகாரிகள் தள்ளி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

குரியன்
ஜூலை 18, 2025 12:29

இந்தியர்கள் அந்நிய நாட்டில் கொலை செய்தவர்களுக்கு எல்லாம் இனி மத்திய அரசாங்கமே போராடி விடுவிக்குமா ?


Indian
ஜூலை 18, 2025 17:17

அந்த ஏமன் நாட்டு காரன் பாலியல் தொல்லை கொடுத்து , பாஸ்போர்ட் பிடுங்கி வைத்து , பணம் ஏமாற்றி பறித்தது , துப்பாக்கி காட்டி மிரட்டியது எவ்வகையில் நியாயம் ???


nizam
ஜூலை 18, 2025 09:50

யோவ் உன் குடும்பத்தினர் மனநிலையில் பார் ஒரு சூழ்நிலையின் அதுவும் அபலை பெண் அதுவும் அந்நிய மண்ணில் தான் உயிர் தப்பிக்க


சூரியா
ஜூலை 18, 2025 06:29

தேவையற்ற வேலை. செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவித்ததுடன் அவர்களுக்கு தியாகி பட்டம் தந்ததுபோலச் செய்யவேண்டுமா?


Indian
ஜூலை 18, 2025 14:00

அந்த ஏமன் நாட்டு காரன் பாலியல் தொல்லை கொடுத்து , பாஸ்போர்ட் பிடுங்கி வைத்து , பணம் ஏமாற்றி பறித்தது , துப்பாக்கி காட்டி மிரட்டியது எவ்வகையில் நியாயம் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை