உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு கண்டனம்; 10 நாளில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜாமின் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு கண்டனம்; 10 நாளில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவிற்கு 10 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்யா குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதி அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.செந்தில்பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பாக, விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம், அதற்கு இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.நீதிபதிகள் தரப்பில், கோர்ட்டில் ஜாமின் பெற்றவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்னும் அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. ஆகவே அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இது போல பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல என்று கூறியதுடன், 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு எந்தவித கால அவகாசமும் அளிக்கப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Venkat.
மார் 25, 2025 15:18

குற்றவாளியிடமே நீதிமன்றம் நாங்கள் உனக்கு ஜாமின் கொடுத்தது தப்புனு ஒருத்தர் கேட்கிறார்.நாங்க செய்தது தப்பா சரியானு பதில் சொல்லுங்க அப்படினு நீதிமன்றம் கேட்குது.


sankar
மார் 25, 2025 12:42

இந்த சலுகை ஒரு சாதாரண பாமரனுக்கு கிடைக்குமா சார்


ponssasi
மார் 25, 2025 10:40

செந்தில் பாலாஜி வழக்கில் முதல்வர் மவுனம் ஆபத்தானது. மதுவுக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவது நாடறிந்த செய்தி, இதில் தமிழக அரசே தலையிட்டு FIR பதிந்திருந்தது செந்தில் பாலாஜி துறையை மாற்றியிருக்கவேண்டும் இதுதான் தன்னை நம்பி வாக்களிலித்த மக்களுக்கு முதல்வர் செய்யும் சேவை. அதைவிடுத்து நீதிமன்றத்தில் அமைச்சர் பொறுப்பு விளகுகிறேன் ஜாமீன் தாருங்கள் என மண்டாடி ஜாமீன்பெற்று மறுநாளே அதே துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில். இதில் செந்தில் பாலாஜி குற்றவாளி இல்லை முதல்வர்தான் குற்றவாளி. முதல்வர் செந்தில்பாலாஜியை குற்றம் செய்ய தூண்டுகிறார் அதற்காக அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இல்லை எனில் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்


Lkanth
மார் 25, 2025 07:46

சட்டம் இயற்றியது 21 பேர் கொண்ட குழு அதற்கு தலைவர் தான் இவர். ரப்பர் ஸ்டாம்ப் ஆக பயன் படுத்தி கொண்டது காங்கிரஸ். காங்கிரஸ்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் காவலன் என்று சலுகைகள் கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.


மு செந்தமிழன்
மார் 25, 2025 07:35

நாட்டின் சட்டங்களில் ஓட்டை இருக்கலாம் சட்டமே ஓட்டையாக இருந்தால் நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடும். இந்த செந்தில் பாலாஜி ஒரு விஷசெடி அடியோடு வெட்டுவது தான் நல்லது


Appa V
மார் 24, 2025 22:52

பத்து நாட்களுக்குள் கோர்ட்டார் கோடை விடுமுறை அறிவிக்காமல் இருப்பார்களா ?


Pollachi tamilan
மார் 24, 2025 22:35

ஐயா எனக்கு ஒரு டவுட். இந்த கேவலமான சட்டமே அம்பேத்கர் இங்கிலாந்துதா காபி பண்ணுனது தானே. அனால் ஒருத்தனும் தண்டனை அனுபவிச்ச மாதிரி தெரியலை, தப்பு பண்ணுறவன் மேல மேல தப்பு பண்ணுறான்.இந்த லச்சனத்தில இதை எதுக்கு காப்பிய பன்னுனாரு அம்பேத்கர் .


Appa V
மார் 25, 2025 02:18

இங்கிலாந்து இருக்கும் இடங்களில் இந்தியா என்று எழுத அந்த காலத்தில் in place செய்யும் கம்பியூட்டர் இல்லாததால் புதிதாக எழுத வேண்டியிருத்தது


Matt P
மார் 24, 2025 22:19

இவர் அமைச்சர் பதவியில் இருப்பது நல்லது தான். அமைச்சர் பதவியில் இருந்து கொன்டே எங்கும் ஓடி ஒழிய முடியாது. இவர் தம்பி எங்கேயோ ஒழிஞ்சிருக்க மாதிரி தெரியுது.


M S RAGHUNATHAN
மார் 24, 2025 21:21

It has been 2 years since SC suspended the conviction of Rahul. The SC is yet to decide the defamation case in which Rahul was convicted . What is the reason for so much of delay ? Is the SC afraid of Rahul ? The people are losing their faith in the integrity and honesty of the highest judiciary.


Mannathil Muralidharan
மார் 24, 2025 21:01

செந்தில் பாலாஜி வக்கீல் கேட்டது 2 நாள் அவகாசம். . உச்ச நீதி மன்றம் கொடுத்தது 10 நாள். வெட்கக்கெடு


முக்கிய வீடியோ