உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்

பாலக்காடு: ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்ற கலால் துறை உதவி ஆய்வாளரை, கேரள அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு கலால் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகம், 48. இவர், அக்., 2ம் தேதி கல்லடிக்கோடு என்ற பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டார். மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, கலால் துறை நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் மீறப்பட்டதாக, எஸ்.பி., அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாநில கலால் துறை ஆணையர் அஜித்குமார், உதவி ஆய்வாளர் சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nagoor Meeran K A
நவ 13, 2025 11:07

RSS இன் தேசபக்தி வினோதமான ஒன்று.


Sekar Govindasamy
நவ 13, 2025 10:35

கேரள அரசின் நடவடிக்கை சரியே


Thangaperumal T
நவ 12, 2025 21:12

ஆர் எஸ் எஸ் தேசபக்தி இயக்கம்தானே, அதில் பங்கேற்றதில் என்ன தப்பு இருக்கிறது?


NAGARAJAN
நவ 12, 2025 20:37

டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்


போராளி
நவ 12, 2025 16:41

யூனிஃபார்ம் போட்ட சங்கி


Kalyanaraman
நவ 12, 2025 07:50

இதுபோன்று முஸ்லிம் லீக் உறுப்பினராக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு நடவடிக்கையை எடுக்குமா?? பெரும்பான்மையருக்கு ஒரு நியாயம்: சிறுபான்மையினருக்கு ஒரு நியாயமா??


Krishna
நவ 12, 2025 07:22

Misuse of Powers by Ruling CommunistsOnly Active Working in PoliticalParties, Banned Organisations& VestedCommercial Interesrs are Prohibited for Public Servants


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை