உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

அமலுக்கு வந்தது சிம் பைண்டிங் விதிமுறை: சிம்கார்டு இல்லாமல் வாட்ஸ் அப் செயல்படாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் வாட்ஸ் அப் செயல்படுத்த சிம்பைண்டிங் முறை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனிமேல் ,வாட்ஸ் அப்பில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டு, மொபைல்போனில் இல்லாவிட்டால் அச்செயலி செயல்படாது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை கருத்தில் கொண்டு சிம்பைண்டிங் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. மார்ச் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்து இருந்தது.உலகளவில், வாட்ஸ் அப் நிறுவனமானது ஒரு முறை பரிசோதனை முறையை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி ஓடிபி முறையில் மொபைல் எண்ணை உறுதி செய்த பிறகு,வாட்ஸ் அப் கணக்கு செயல்பட துவங்கும். அந்த மொபைல்போனில் இருந்து சிம்கார்டை அகற்றினாலும், அல்லது மொபைல்போன் மூலம், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப் லாகின் செய்திருந்தாலும் எந்த பிரச்னையும் இருக்காது. வாட்ஸ் அப் செயலி தொடர்ந்து செயல்படும்.தற்போது சிம்பைண்டிங் முறை இதில் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது.இதன்படி வாட்ஸ் அப்பை எந்த மொபைல் எண்ணில் இயக்குகின்றமோ அதன் சிம்கார்டு பயன்படுத்தும் மொபல்போனில் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையென்றால் வாட்ஸ் அப் சேவை துண்டிக்க வேண்டும்.கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை தானாக லாக் அவுட் செய்யப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய சிம்கார்டு மூலம் வாட்ஸ் அப் செயலியை ஆக்டிவேட் செய்யும் மோசடியாளர்கள், பிறகு நாட்டிற்கு வெளியே சென்று ரிமோட் மூலம் அதனை இயக்குகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஆக உள்ளது. இனிமேல் மோசடியாளர்களால் அப்படி செயல்பட முடியாது. அவர்களை கண்டுபிடிப்பது எளிது என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

உளவாளி
மார் 02, 2026 07:59

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தான் அதிகளவில் ஃபோன் உட்பட கம்ப்யூட்டர் லேப்டாப் ஹாக் செய்யும் கிரிமினல்கள் அதிகம் இருக்கும் ஊர். இவர்களில் 95 சதவீதம் பேர் எந்த வேலைக்கும் செல்லாதவர்கள். இவர்களது ஆடம்பர செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி. இது உள்ளூர் போலீசுக்கு நன்கு தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அத்தனையும் அரசியல் பின்னணி. ‌ஊழல் லஞ்சம் பணம் கலெக்டர் எஸ்பி உட்பட அனைத்து அதிகாரிகள் உட்பட குறிவைக்கப்பட்ட பொதுமக்கள் வரை கண்காணிக்கப்படுகின்றனர் இந்த ஹேக்கர்களால்... இவர்களில் பலர் நக்சல் கம்யூனிஸ்ட் மனப்பான்மை நிறைந்தவர்கள். நாட்டின் பாதுகாப்பு ஒற்றுமைக்கு ஆபத்தான இவர்கள் நடத்துவது சில போலி கல்வி நிறுவனங்கள் மற்றும் சிலர் பொதுமக்கள் தொடர்பு சார்ந்த சில வேலைகளில் பணியாற்றுபவர் கள். உதாரணத்திற்கு ரெட் டாக்ஸி அலுவலக பணியாளரும் ஃபோன் ஹேக்கர் தான். ‌


Chandhra Mouleeswaran MK
மார் 01, 2026 23:29

மிகவும் நல்ல முடிவு. இணையப் பயன்பாடு நம் நாட்டு மக்களுக்கும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் எதிராகச் சதித்திட்டங்களைச் செயற்படுத்த உதவுவதை அடக்க வேண்டும். மேலும், வாட்ஸ்அப் தனது பயனாளர் அனைவருடைய அனைத்துத் தகவல்களையும் வரம்பில்லாமல் சேகரித்துக் கொண்டு வருவதையும் அவற்றை சாட் ஜிபிடி ஏஐ தொழில் நுடப நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டின் கீழ் விற்பனைக்குத் தருவதையும் அடியோடு தடுக்க வேண்டும்.


ஷாலினி
மார் 01, 2026 23:07

நல்ல முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை