உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ திட்டம்: லடாக்கில் ஆய்வு துவக்கம்!

வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ திட்டம்: லடாக்கில் ஆய்வு துவக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில், புதிய சோதனைகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது.இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. அதேபோல, விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த மூன்று வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான பயிற்சியை இஸ்ரோ அளித்து வருகிறது. அண்மையில் இந்தத் திட்டம் தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று கூறியிருந்தார்.

தொடக்கம்

இதற்கிடையே விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து, ஆய்வை தொடங்கியுள்ளது இஸ்ரோ.

திட்டம்

விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனை நடத்துவதே சரி என்ற அடிப்படையில் இந்த, 'அனலாக்' சோதனை லே பகுதியில் நடத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகம் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர் சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் சோதிக்கப்பட உள்ளன.லடாக் மலை மேம்பாட்டுக்குழுமம், மும்பை ஐ.ஐ.டி., லடாக் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.SIVARAMAN.
நவ 02, 2024 20:31

முந்திய ஆட்சியில் இருந்தவர்கள் ஆமை வேகத்தில் செயல்படுத்தினர். ஆனால் இந்த ஆட்சியில் ரஃபேல் வேகத்துல நடக்கிறதை பார்க்கும் பொழுது ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்தி நமது விஞ்ஞானிகளுக்கு ஒரு சல்யூட்.


தாமரை மலர்கிறது
நவ 01, 2024 22:55

மோடி ஆட்சியால், இஸ்ரோ நாசாவை விரைவில் மிஞ்சிவிடும் என்பதில் ஐயமில்லை.


Kumar Kumzi
நவ 01, 2024 16:06

நாட்டுக்கு கேடுவிளைவிக்க நினைக்கும் மூர்க்க காட்டேரிகளை முதலில் வேற்று கிரகனுங்களுக்கு அனுப்புங்கள்


Barakat Ali
நவ 01, 2024 13:22

வேற்று கிரகம் ... அங்க ஒரு கோயில் கட்டுங்க ..... துருக்காம்மா வருவாங்க ...... ஏதோ வேண்டுதலாம் ....


தென்காசி ராஜா ராஜா
நவ 01, 2024 13:00

இருக்கும் பூமியை இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி கொண்டு வாங்க மாசில்லா உலகத்தை


Chandran,Ooty
நவ 01, 2024 13:55

உன்னைப் போன்ற எண்ணம் கொண்டவர்களின் மண்டை மண்ணுக்குள்ள போனாலே பூமி மாசில்லாமல் இயல்பு நிலைக்கு மாறிவிடும்.


முக்கிய வீடியோ