உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு தேவை: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு தேவை: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

புதுடில்லி: 'மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு அளிக்க வேண்டும்' என நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகிய இரண்டு பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.நிடி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தது குறித்து சமூக வலைதளத்தில் முதல் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:* வரி வருவாயில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரி பகிர்வு அளிக்க வேண்டும்.* P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.* குறிப்பாக, 2024-2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.* தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.* இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.* நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.* சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

எஸ் எஸ்
மே 25, 2025 08:10

தமிழில் மொழி பெயர்க்கும் போது எங்க அப்பா பேரை செருகி ஏதோ மாநில அரசின் திட்டம் போல் ஸ்டிக்கர் ஒட்டுவோம்


என்னத்த சொல்ல
மே 25, 2025 06:32

இங்குள்ள கருத்துக்களை பார்த்தல், தமிழ்நாட்டிற்க்கு நிதி கொடுக்க வேண்டாம் என சொல்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா என தெரியவில்லை. இங்கிருப்பவர்கள், இங்குள்ள வசதியை அனுபவித்து கொண்டு, அதனால் முன்னேறியுள்ளவர்கள், கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.. stalin மேல் உள்ள கோபத்தால், தமிழ்நாட்டை பாழ்பட நினைப்பது போல் தெரிகிறது.


oviya vijay
மே 25, 2025 08:06

கள்ள சாராயம் குடித்தவருக்கு 10 லட்சம் எங்கள் வரிபணத்தில்... அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாம் விருப்ப மொழியில் படிக்க தடா. என்னத்த கிழிக்க....


தாமரை மலர்கிறது
மே 24, 2025 23:44

பத்து பைசா கிடையாது. டெல்லிக்கு வந்தாயா ஊரை சுற்றி பார்த்தாயா என்று இருக்கணும். மூட்டைமுடிச்ச கட்டிக்கிட்டு ஒழுங்கா ஓடிபோயிடு.


ems
மே 24, 2025 23:04

முதல்வர் குடும்பத்திலேயே ஏராளமான நிதி உதய, கலா, போன்ற... நிதிகள் இருக்கே.... அப்புறம் ஏன் மத்திய அரசை அவசரமா நிதி கொடுங்கனு கேக்கணும்...


ராமகிருஷ்ணன்
மே 24, 2025 21:26

தமிழகத்தில் ஓட்டுக்கான விலை ஏறி விட்டது. இன்னும் பல இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாக்கி ஏமாத்த வேண்டும் மேலும் கட்சிகாரங்க சுருட்டி முழுங்க பணம் தேவை படுகிறது அதனால பணம் அதிகமாக கொடுங்க.


Venugopal,S
மே 24, 2025 20:57

வரி காட்டுபவர்களின் ஒப்புதல் இல்லாமல் எவ்வித இலவசமும் குடுக்க கூடாது. வரிப்பணம் முறையாக நாட்டு நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் அந்த மாநிலத்திற்கு கடும் அபராதம் விதிக்கப்படும்


vbs manian
மே 24, 2025 19:54

நிதி ஆயோக் இந்தியாவின் எதிர்கால திட்டம் வளர்ச்சி பற்றி. வரி உயர்வு பற்றி நிதி கமிஷனிடம் பேசவேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 24, 2025 18:56

இலவசங்களை குறைத்து, தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தினால் தானாக வரிவருவாய் அதிகரிக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 24, 2025 18:53

அந்நிய ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மாநிலங்கள் மொழிபெயர்த்துக் கொள்வார்களாம். ஏன் இந்தியாவின் பழம்பெரும் மொழியான சம்ஸ்கிருதத்தில் பெயர் வைத்தால் மொழிபெயர்க்கத் தெரியாதா? பெட்ரோமாக் லைட்டேதான் வேணுமா?


venugopal s
மே 24, 2025 18:43

தமிழக முதல்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் மத்திய பாஜக அரசு ஒத்துக் கொள்ள மனம் வேண்டுமே!


vivek
மே 24, 2025 20:58

முடியவே முடியாது கோபால்....வேணுகோபால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை