உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 13 ஆண்டுகளாக கோமாவில் இருப்பவரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி

13 ஆண்டுகளாக கோமாவில் இருப்பவரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை கருணைக்கொலை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது.உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் ராணா,32. கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அப்போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சுயநினைவை இழந்து கோமாவுக்கு சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ngd8h7m0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர் குணமடைய வாய்ப்பு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையும் உறுதிப்படுத்தி விட்டது.இதையடுத்து, தனது மகனை மறைமுக கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி ஹரிஷ் ராணாவின் தந்தை அசோக் ராணா சுப்ரீம்கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த ஜனவரி மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அனுமதி

இந்நிலையில் இன்று (மார்ச் 11) , 13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் ஹரிஷ் ராணாவை கருணைக்கொலை செய்ய நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி அளித்து உள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நோயாளிக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக, நோயாளியை எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தடுப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்க வேண்டும். நோயாளியை அவரது இல்லத்திலிருந்து சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எய்ம்ஸ் நிர்வாகம் செய்து தர வேண்டும், எனக் கூறியுள்ளனர்.ஏற்கனவே 2018 மற்றும் 2023ம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தால் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக கடந்த ஜனவரி மாதம் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்று, இந்தியாவில் கருணைக் கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி அளிப்பது இதுவே முதல்முறையாகும்.

கண்கலங்கிய நீதிபதி

ஹரிஷ் ராணாவின் பெற்றோர் தங்கள் மகன் மீது காட்டிய அளவில்லாத அன்பு மற்றும் கவனிப்பிற்காக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். அப்போது, உருக்கமாக பேசிய நீதிபதி பர்திவாலா, ' ஹரிஷ் ராணாவின் குடும்பம் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை. ஒருவர் மீது அன்பு காட்டுவது என்பது இருண்ட காலத்திலும் அவரைக் கவனித்துக் கொள்வது தான்,' எனக் குறிப்பிட்டு கண்கலங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

R. SUKUMAR CHEZHIAN
மார் 11, 2026 21:27

இறைவா..... கேட்கவே வேதனையாக உள்ளது. ஓம் சாந்தி ஓம்


Sureshkumar
மார் 11, 2026 16:19

மகனை இந்த நிலைமையில் பார்க்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. அந்த குடுமபத்திற்கு ஆறுதலும் மகனின் ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். ஓம் சாந்தி.


Ms Mahadevan Mahadevan
மார் 11, 2026 15:13

அந்த பெற்றோர்க்கு மனது எப்படி வேதனையுடன் இருக்கும் என்பதை நீதி அரசர்கள் புரிந்து கொண்ட தன் காரணமாகத்தான் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். அவரின் ஆன்மா தாய் தந்தைக்கு நன்றி சொல்லும் என்பதிஇல் ச ந்தேகம் இல்லை


Mahesh Rajan
மார் 11, 2026 15:09

கடவுளால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கருணைக் கொலைசெய்வதை என் மனம் ஏற்கவில்லை. அதேநேரத்தில் அந்த உயிர் படும் வேதனையையும் பார்க்கமுடியவில்லை. கருணைக்கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கடவுளின் அருளால் அவர் தனது நாள்பட்ட கோமாவிலிருந்து மீண்டு சுயநினைவைப்பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென்று எல்லாம்வல்லவனிடம் மனமுருகி பிரார்த்திக்கிறேன்.


Field Marshal
மார் 11, 2026 15:46

குருடர்கள் பார்க்கிறார்கள் ..முடவர்கள் நடக்கிறார்கள் ..ஜெப கூடத்தில் பிரார்த்தனை செய்யலாமே


Nandakumar
மார் 11, 2026 14:31

ஏதாவது மூளை surgery ஆராய்ச்சி செய்து அதனால் உயிர் பிழைத்தாலும் நல்லது, இறந்தாலும் இது ஒரு பரிசோதனையாக இருக்கும்,


ஆரூர் ரங்
மார் 11, 2026 14:29

பெரும்பாலும் நீண்டகாலமாக கோமாவில் மருத்துவக் கருவிகளின் துணை, செயற்கை மூச்சு என இருப்பர். அவற்றை அகற்றி விட்டால் உயிர் பிரிந்துவிடும்.


Rathnam Mm
மார் 11, 2026 19:07

Without artificial respiration, patients goes to Goma


சாதிக் ஐஷ்வா, கேரளா
மார் 11, 2026 14:23

இறைவன் குடும்பத்தார்க்கு ஆறுதலோ மறதியோ தந்து காக்கட்டும்.


S.L.Narasimman
மார் 11, 2026 13:45

கருணைக்கொலை நிகழ்வு நடக்கும்போதும் மகனின் உயிர்துடிப்பு நிற்கும் போதும் பொற்றோர் துயரம் / மனது எந்த அளவு துடிக்கும் என்று எவ்வளவு வார்த்தைகளிலும் கூற முடியாது. கடவுள் ஆறுதல் அளிக்கவேண்டும்.


SJRR
மார் 11, 2026 13:30

பெற்றவர்களே தாங்கள் பெற்ற பிள்ளையை கருணை கொலை செய்ய முறையிடுவது என்பது உலகத்திலேயே மிகப்பெரிய வேதனையான ஒரு விஷயம். அந்த மகனை பெற்றவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்கட்டும்.


இந்து
மார் 11, 2026 13:23

பெற்றோர் பட்ட வேதனை கொடூரம். (எப்படி விழுந்தார் என்பது முக்கியம் இல்லை) யாருக்கும் இந்நிலை வரக்கூடாது.மனிதாபிமான நீதிபதிகளின் தீர்ப்பிற்கு எப்படி நன்றி தெரிவிப்பது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை