உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவை ஈஷா மையத்தில் போலீஸ் சோதனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

கோவை ஈஷா மையத்தில் போலீஸ் சோதனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

புதுடில்லி: ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆன்மிக மையத்துக்குள் ராணுவத்தையோ, போலீசாரையோ அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்த காமராஜ்,69 என்பவர் சென்னை ஐகோர்ட்டில், ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரு மகள்களையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட போலீசார் இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.இதனையடுத்து, கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா ஆகியோர் தலைமையிலான குழுவினர், ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று (அக்.,03) ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.* 'ஆன்மிக மையத்துக்குள் ராணுவத்தையோ, போலீசாரையோ அனுமதிக்க முடியாது.* ஈஷா தொடர்பான வழக்கில், ஆட்கொணர்வு மனு ஏற்புடையது அல்ல.* உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண் துறவிகளுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் காணொலி மூலம் பேச உள்ளார். அதன் பிறகு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஈஷா மையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Prasanna Kumar P
அக் 04, 2024 15:44

If army or police could not enter Esha then how is "Operation Blue star" possible in Golden Temple ....If High court gives a direction which is blocked by SC then God Esha only bring out the truth of whats happening inside the premises ...


AMLA ASOKAN
அக் 04, 2024 00:06

இந்து மதம் 5000 ஆண்டுகள் பழமையானது . நூற்றுக்கனக்கான மஹான்கள் , ஞானிகள் இந்த மதத்திற்கான பரப்புரைகளை வழங்கியுள்ளனர் . அந்தக்காலத்து மன்னர்களும் இந்துமக்கள் வழிபடுவதெற்கென நகரங்கள் , ஊர்களின் மத்தியில் ஆயிரக்கணக்கான கோயில்களை கட்டியுள்ளனர் . அணைத்து இந்து மக்களும் மிக்க பயபக்தியுடன் தெய்வங்களை அவரவர் சாந்த விதிமுறைகளின்படி வழிபட்டுவந்துள்ளனர் . இறைவனை வழிபடுவது வேறு யோகா பயிற்சிகள் வேறு என்பதால் கோயில்களில் யோகாசனங்கள் நடைபெறுவதில்லை . கடந்த 25 ஆண்டுகளில் யோகா என்பது கடவுள் வழிபாட்டை காட்டிலும் முக்கியமானதைப் போல் முன்னிலை படுத்தப்பட்டு வருகிறது . ஈஷா மையம் சிவனை முன்னிறுத்தி ஒரு புதிய இந்துமதத்தை வலியுறுத்தி வருகிறது . அந்த மையமும் ஊரை விட்டு தூரத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் யாரும் நுழைய முடியாத முழுப் பாதுகாப்புடன் 1000 க்கு மேற்பட்ட வெளியுலக தொடர்பற்ற மொட்டையடித்த பட்டதாரி சந்நியாசிகளுடன் இயங்கி வருகிறது . மேலும் பணக்காரர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறார்கள், மற்றும் ஆடம்பரமாக விழாக்களும் நடத்தப்படுகின்றன . நடுத்தர மக்கள் , ஏழை எளிய இந்து மக்களுக்கு அனுமதியில்லை . இதை எப்படி நியாப்படுத்துவது என்பது புரியாத புதிராக உள்ளது .


Kasimani Baskaran
அக் 03, 2024 19:57

விட்டால் ஈஷாவும் கஞ்சா வைத்திருந்ததாக கூட திராவிடம் சொல்லும்.


துறவி
அக் 03, 2024 17:54

இவங்களுக்கு மட்டும் நேரா சுப்ரீம் கோர்ட் களமிறங்குது. மற்ற கேஸ்னா கிராம பஞ்சாயத்திலிருந்து முன்சீப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், ஹைகோர்ட்டுன்னு படிப்படியா ஏறிட்டு வரச்சொல்லுவாங்க.


GMM
அக் 03, 2024 17:08

மாநில ஆளும் கட்சி ஒரு நிறுவனம், அமைப்பை சிறிய காரணங்களுக்கு துன்புறுத்தி, முடக்க முயல்கிறது. மாநில அளவில் நீதிமன்றத்தில் கூட நிவாரணம் பெற முடியவில்லை. ஈஷா போன்ற தனியார் அமைப்புகள் பணம் செலுத்தி மத்திய பாதுகாப்பு படையை நியமிக்க வழிவகை செய்து தர வேண்டும். திமுக போன்ற மாநில நிர்வாகம் சர்வாதிகாரி ஆவதை நீதிமன்றம், மத்திய அரசு முடக்க முடியும். குற்ற செயல்கள் அதிகம் நிகழும் மாநில பகுதியில் மாநில கட்சியினால் அரசியல் காரணங்களுக்காக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த பகுதியில் மத்திய கண்காணிப்பு படை நிறுவ வேண்டும். செலவை மாநில நிர்வாகத்திடம் வசூலிக்க வேண்டும். பிறப்பு இறப்பு சான்று, சுடுகாடு, குப்பை கிடங்கு போன்ற சிறிய பணிகள் செய்யும் மாநிலங்களுக்கு அதிக நிதி கூடாது. கடன் பெற அனுமதி கூடாது. மாநிலம் நீக்கப்பட்டு மாகாணம் மற்றும் யூனியன் ஆக்க வேண்டும்.


Kundalakesi
அக் 03, 2024 16:52

எது நிர்பந்தம் செய்யாமல் மதமாற்றமா? இறந்த பின் நரகம், உங்களுக்கு மறுமை நாள், 72 பெண்கள் என ஆசையையும் பயத்தையும் காட்டும் மாதங்களில் இருந்து இந்த ஆலோசனை தேவையா.


s sambath kumar
அக் 03, 2024 15:43

மிஸ்டர் முகமத் யூனுஸ், யாரையும் மதம் மாறாதே என்று சொல்லவில்லை. பணம், பிற சலுகைகள் கொடுத்து மாற்றாதே என்று தான் சொல்கிறோம். என் உறவினர் இருவர் கிறிஸ்த்தவ பசங்களை காதலித்து கல்யாணம் செய்து கிறிஸ்தவராக மாறிவிட்டனர். நாங்க ஒன்னும் பண்ணவில்லையே.


Suppan
அக் 03, 2024 15:22

ஓவியா இந்த வழக்கு 2014 லேயே முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப்பெண்களை விசாரித்துவிட்டு நீதி மன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. மடை மாற்றத்திற்காக திரும்பவும் இந்த வழக்கை சம்பந்தப்பட்டவர் தொடர்ந்துள்ளார். சமணம், கிறிஸ்தவம் போன்ற மதங்களிலும் கன்யாஸ்த்ரீகள் உண்டு. அவைகளில் நீதி மன்றம் தலையிடுமா? திருட்டு விடியலுக்கு ஹிந்துமத அமைப்புக்களக் கைப்பற்றி கொள்ளையடிக்கவேண்டும். அதற்குத்தான் இந்த வேலை.


M S RAGHUNATHAN
அக் 03, 2024 14:32

செந்தில் பாலாஜி பிணையில் தானே வெளி வந்து இருக்கிறார். நிரபராதி என்று உச்ச நீதி மன்றம் விடுதலை செய்யப் படவில்லை. இதற்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்.


ஆரூர் ரங்
அக் 03, 2024 14:10

மற்ற மதத்தினர் பிள்ளைகளுக்கு பொதுக்கல்வியை தராமல் சிறு வயதிலேயே மதப்பள்ளிகளில் சேர்த்து குருமார் அல்லது கன்னியாஸ்திரிகளாக ஆகிவிடுகிறார்களே. அந்தப் பிள்ளைகளின் ஒப்புதலைப் பெற்றா அப்படி சேர்க்கிறார்கள்? ஹிந்து நிறுவனங்களை மட்டும் குறிவைப்பதேன்?.கட்டாய மதமாற்றப் பிசாசுகளை ஈஷா அடக்கி வருவதால் இது போன்ற பொய் வழக்குகளை தூண்டி விடுகிறார்கள் எனத் தோன்றுகிறது.


karthik
அக் 03, 2024 16:02

இந்துக்களையும் இந்து காலாச்சார வாழ்க்கை முறையையும் ஒழித்துக்கட்ட பெரும் கூட்டம் வேலை செய்துகொண்டிருக்கிறது


முக்கிய வீடியோ