உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய்கள் விவகாரம்: அரசு செயல்பாடு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

தெருநாய்கள் விவகாரம்: அரசு செயல்பாடு மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசின் செயலற்ற தன்மையால் தெருநாய்கள் பிரச்னை ஏற்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட் 3 நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cigt02ua&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்புகள் கிளம்பியது.இந்த சூழலில், இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அமைத்தார். அதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 14) விசாரித்தது.அப்போது டில்லி அரசின் சார்பாக ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நாய் கடிக்கு பிறகு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது.கருத்தடை சிகிச்சை செய்தாலும் ரேபிஸ் தொற்று பரவலை தடுக்க முடியாது. நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டாலும் அது குழந்தைகளை கடிப்பதை தடுக்க முடியாது. 2024ம் ஆண்டில் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.அனைத்து தரப்பினர் வாதங்களை கேட்ட பிறகு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், அரசின் செயலற்ற தன்மையால் தெருநாய்கள் பிரச்னை ஏற்பட்டுள்ளது என அதிருப்தி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, நெருநாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான விவாதங்களை முன்வைக்காதீர்கள் என விலங்கு ஆர்வலர்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Sureshkumar Muthukrishnan
ஆக 15, 2025 16:46

காந்தி சொன்னார் உண்மையான சுதந்திரம் எப்போஸுது ஒரு பெண் தனியாக இரவு சாலையில் செல்ல முடிகிறதோ அது தான் உண்மையான சுதந்திரம். இப்போ


Techzone Coimbatore
ஆக 14, 2025 15:20

இங்கே நாய்களுக்கு எதிராக பொங்கும் மக்களுக்கு சில கேள்விகள் கடந்த 10 வருடங்களில் 15.3 லட்சம் மக்கள் விபத்தால் இறந்துள்ளனர் வருடத்திற்கு 1.53 லட்சம் வருடத்திற்கு 2.6 லட்சம் to 5 லட்சம் மக்கள் மதுவால் இறந்துள்ளனர் நாய் கடியால் 5000 மக்கள் இறந்துள்ளனர் நீங்களே இதை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யுங்கள் இந்த மனித சமுதாயம் எவளோ இரக்கமற்றதாக உள்ளது இங்கே உள்ள பதிவுகளை பார்த்தாலே புரிகிறது மேலும் கோடிக்கணக்கான கோழிகள், ஆடு, மாடுகள் வருடா வருடம் மனிதன் தன் உணவு இச்சைக்காக கொல்ல படுவது நியாயமா. இங்கே உள்ளவர்களுக்கு இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் என்ற நினைப்பு. நன்றாக நாய்கள் மீது வெறுப்பு காட்டுங்கள். விதி ஒன்று உள்ளது. யாரும் தப்பிக்க முடியாது. காலபைரவர் நீதிமன்றமும் சரி நாயை வெறுக்கும் பொதுமக்களுக்கும் சரி தங்கள் பக்கம் மட்டுமே நியாயம் உள்ளது எண்ணம் உள்ள வரை. நாய்களின் பக்கம் உள்ள நியாயம் புரியாது. செய்யுங்கள் உங்களால் என்ன முடியுமோ. மனித அழிவு நாய்களால் அல்ல , மனிதர்களால் தான் காலநிலை மாற்றம், உணவு கலப்படம். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், கொலைகள், புயல்களால், போர்களால்,


Premanathan S
ஆக 14, 2025 17:30

உங்களுக்கு நாய்க்கடியால் ரேபிஸ் வராமல் தடுக்கும் சக்தி இயற்கையாகவே இருக்கிறதோ? முதலில் மனித உயிர்கள் அனாவசியமாக போவதை தடுக்க எடுக்கும் நடவடிக்கைளை குறை சொல்லாதீர்கள்


கனோஜ் ஆங்ரே
ஆக 14, 2025 18:35

இந்த பூச்சாண்டி காட்ற வேலையெல்லாம் எங்க மாதிரி ஆளுங்ககிட்ட வேணாம்... ஏன்னா, நாங்க, பனங்காட்டு நரி... உன்ன மாதிரி பகுத்தறிவுக்கும், அறிவுக்கு புறம்பான கட்டு கதையெல்லாம் நம்ப மாட்டோம்...ஒரு பத்து பதினைஞ்சு வெறிபிடிச்ச நாய் மூஞ்சுமொகர, கைகால் போன்ற கடிச்சு குதறினால்... அப்ப தெரியும்... “நாய்”..ன்னா என்ன, அதன் இயல்பு என்ன...?ன்னு


GMM
ஆக 14, 2025 15:08

நீதிபதிகள் வழக்கறிஞர் வாதம் கேட்டு, அரசின் நிர்வாகத்தில் சட்ட விதிகள் மீறி அதிகம் குறிக்கிடுவதால், அதிகாரிகள் குழப்பம் அடைவர்.? அரசின் செயலற்ற தன்மை என்ற ஒன்று இல்லை? தெருநாய்கள் ஆதரவாக பொதுநலம் என்று விதண்டா வாதம் செய்யும் முன், செலவில் 25 சதம் டெபாசிட் செய்ய மன்றம் சொல்ல முடியும். குழப்பமான வாதம் என்றால் டெபாசிட் பறிமுதல் செய்ய வேண்டும். தீர்வு சொல்ல தெரியாமல், எதற்கு மனு தாக்கல் செய்ய வேண்டும்? அதனை உடன் தள்ளுபடி செய்ய முடியும்.


Kannan
ஆக 14, 2025 14:59

தெருநாய்களைப் பிடித்து விலங்கு ஆர்வலர்களிடம் ஒப்படைத்து விடலாம்


karthik
ஆக 14, 2025 13:30

தெருநாய்களுக்கு ஆதரவாக பேசும் பன்றிகளின் வீட்டில் நடுமுழுதும் தலா 100 நாய்களை குடுத்து வீட்டிற்குள் வைத்து வளர்க்கச்சொல்லுங்கள்.


Ms Mahadevan Mahadevan
ஆக 14, 2025 13:12

மனித ஆரோக்கிய உரிமைகள் ரெம்பாவு முக்கியம். பாதுகாப்பும் முக்கியம். அதற்கு குந்தகம் செய்யும் அனைத்தும் தடுக்கப் பட வேண்டும்


Nalla Paiyan
ஆக 14, 2025 13:11

எல்லா தெரு நாய்களையும் நாய் ஆர்வலர்கள் வீட்டில் கொண்டு கட்டிப்போட்டு விட வேண்டும் அவர்கள் குழந்தைகள் நாய் கடித்து கதற வேண்டும்...


Techzone Coimbatore
ஆக 14, 2025 15:22

அப்பிடியா நாய்கள் கடித்து தான் குழந்தைகள் இறக்கின்றனரா? வேறு எந்த வகையிலும் குழந்தைகள் இறப்பதில்லை?


JaiRam
ஆக 14, 2025 13:00

இனி தீர்ப்பு கிடப்பில் போடப்படும் பின் பத்து வருடம் கழித்து வாசிக்கப்படும் அதற்குள் ஏராளமானோர் செத்த பின்பு


Techzone Coimbatore
ஆக 14, 2025 17:35

கடந்த 10 வருடங்களில் 15.3 லட்சம் மக்கள் விபத்தால் இறந்துள்ளனர் வருடத்திற்கு 1.53 லட்சம் வருடத்திற்கு 2.6 லட்சம் to 5 லட்சம் மக்கள் மதுவால் இறந்துள்ளனர் நாய் கடியால் 5000 மக்கள் இறந்துள்ளனர் இதில் எது மிகவும் கொடியது என்று நீங்களே கூறுங்கள்?


தமிழ்வேள்
ஆக 14, 2025 12:54

மனிதர்களை கடிக்கும் தெருநாய்களின் பற்களை மொத்தமாக பிடுங்கி எடுத்து விடலாம்.... கொன்றால்தான் பீட்டா வகையறா சண்டைக்கு வரும்....


Techzone Coimbatore
ஆக 14, 2025 17:30

அப்பிடியே கொலை செய்யும் மனிதர்களின் கையை வெட்டி விடுங்கள். பலாத்காரம் செய்யும் மனிதனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துவிடுங்கள். பிறகு நாயின் பற்களை பிடுங்கலாம். ஓகேவா


கனோஜ் ஆங்ரே
ஆக 14, 2025 12:36

மனிதர்களை கடிக்கும்... கடித்து ரேபிஸ் நோய் தாக்கி மனிதன் இறக்கும்போது... தெருநாய்களை ஏன் கொல்லக் கூடாது...?


Techzone Coimbatore
ஆக 14, 2025 15:51

அப்போ ஒரு மனிதன் கொலை செய்தால் அவனை கொன்று விடுவீர்களா? ஒரு மனிதன் குற்றம் செய்தால் குற்றம் செய்தவனை மட்டும் தண்டனை அளிக்கும் சட்டம். ஏன் ஒட்டுமொத்த தெருநாய்கள் மீது எவளோ வன்மம்? இவ்ளோ வன்மம் கக்கும் மனிதர்களே ஏன் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க முடியவில்லை. நாய்கள் வெறுக்கும் மக்களே. இனி ஒரு பாலியல் குற்றங்கள் நடக்க கூடாது. அதற்குப்பிறகு நீதிமன்றமும் சரி பொதுமக்களுக்கும் சரி , நாய்கள் மீது நடவடிக்கை எடுங்கள்


Techzone Coimbatore
ஆக 14, 2025 16:33

அப்போ கொரோனா வந்த பொழுது எதை கொன்றார்கள் அறிவு ஜீவிகளே. உங்களை போன்ற மனிதநேயமற்ற ஜென்மங்களே சமுதாய சீரழிவுகளுக்கு காரணமாய் உள்ளது நன்றி கடவுளே மனிதனுக்கு மரணம் ஒன்று வைத்தாய். இல்லை என்றால் இவர்களின் ஆட்டம் தாங்க


MUTHU
ஆக 14, 2025 21:14

techzone. நீங்க ரொம்ப காருண்ய சிந்தனை உள்ளவங்க போல. நீங்க என்றாவது ஆடு மாடுகள் அம்மா என்று மனிதனை கூப்பிடுவதை உணர்ந்து பார்த்திருக்கிறீர்களா. தன்னை பிரியாணி போடுபவனையே நம்பி வாழும். சாதுக்களான அவற்றையே கொன்று தின்கின்றனர். அதனை கொல்வதை தடுக்க முயற்சிங்கப்பா முதல்ல.