உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிவு; அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிவு; அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

புதுடில்லி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர் கசிவு தொடர்பாக தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர்., நகல், இணையதளத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 'எப்.ஐ.ஆர்., லீக் ஆன விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec1uy5a6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், எப்.ஐ.ஆர் கசிவு தொடர்பாக தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அப்போது, 'மாணவியை பாதுகாக்க எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்' என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: * அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் வெளியிட்டது யார்?* இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.* எவ்வளவு நேரம் டவுண்லோடு செய்யும் நிலையில் எப்.ஐ.ஆர்., இருந்தது.* தற்போது இணையத்தில் மாணவியின் தரவுகள் உள்ளதா? * மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையை எப்.ஐ.ஆர்., லீக் ஆனதற்கு காரணம் இருந்தவர்களிடம் வசூல் செய்ய வேண்டும். * எப்.ஐ.ஆர்., பதியும் முன் மாணவிக்கு உரிய ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் செயல்கள் தான் குற்றச்செயல் நடப்பதற்கு காரணம் என்று சித்தரிக்கும் வகையில் எப்.ஐ.ஆர்., உள்ளது* மாணவி மீதே பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு வக்கீலிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதையடுத்து,சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

K V Ramadoss
ஜன 28, 2025 03:40

உச்ச நீதிமன்றம் ஒரு நாடக மேடை ...


Rangarajan Cv
ஜன 27, 2025 22:18

As many pointed out this column, SC raising questions won’t have any impact either on police dept or on the govt as they do not consider anything relevant to their existence beyond TN borders. What will SC do in such situation? Will they blink for non compliance or chalta hai attitude? Slightly people are losing faith


theruvasagan
ஜன 27, 2025 22:05

சரமாரி கேள்வி அதிரடி கேள்வி இதல்லாம் சும்மா உளாஉளாகாட்டிக்கு. படு வேகமாய் போயி திடுப்புன்னு யுடர்ன் போடறதில்லை. அந்த மாதிரி.


Jagan (Proud Sangi)
ஜன 27, 2025 20:59

சரமாரி கேள்வி என்று ஒரு குத்து. அப்புறம் தமிழக அரசு/போலீசுக்கு ஆதரவா ஒரு குத்து. ஆகா மொத்தம் ரெண்டு குத்து. உச்சநீதி மன்றம் ஒரு ஜோக்கர் கூட்டமாக மாறிவருகிறது. எல்லாத்துக்கும் தடை


GMM
ஜன 27, 2025 20:20

மாநில முதல்வர் அமைச்சரை நியமிக்கலாம், மாற்றலாம். சட்டமன்றத்தில் கொள்கை முடிவை கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். தலைமை செயலர் தேர்வு செய்யலாம். மற்றபடி அரசியல் சாசனம் நிதி, நீதி, நிர்வாக, அதிகாரம் கொடுக்கவில்லை.? மாநிலம் தேசியத்தின் நிர்வாக பிரிவு. வெப்சைட் ல் ஆதாரமற்ற தகவல் உலாவரும். ஆளும் கட்சிகள் மாநில சட்ட ஒழுங்கு அதிகாரத்தை கையில் எடுத்து, ரவடிகளுடன் சேர்ந்து நிர்வாகம், மக்களை அடக்கி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் உள்ளது போல் தீர்மானித்து வருகிறது. தமிழக உயர் நீதிமன்றம் மத்திய படை பாதுகாப்பில் உள்ளது என்றால், தமிழக சட்ட நிலைமையின் உக்கிரம் அறிய முடியும். பிஜேபி போன்ற கட்சிகள் கூட குடை சாயும் நிலையில் உள்ளன . ? கவர்னரை கண்டிக்க துணிந்த உச்ச மன்றம் திராவிட கட்சிகளை கண்டித்தால், தேசிய ராணுவ பாதுகாப்பு தேவைப்படும் என்று கருதலாம் . ஆகவே சரமாரி கேள்வி. பதில், தீர்ப்பு அனைத்தும் ஆலயம் சாட்சியாக ஒருவரே. ?


Sampath
ஜன 27, 2025 19:14

உச்ச நீதி மன்றத்திலும் அரோகரா வா


Dharmavaan
ஜன 27, 2025 18:24

கேள்விக்கும் நடவடிக்கைக்கும் எதிராக இருக்கிறது .போலீஸ் கமிஷனர்தான் பொறுப்பு என்றால் ஏன் தடை யாரை ஏமாற்ற இந்த நாடகம் இது திமுக சார்பு தீர்ப்பு கேவலம் திமுக எது கேரட்டால் உச்ச ஈதியின் கிடைக்கிறது எப்படி என்ன கள்ள உறவு


M S RAGHUNATHAN
ஜன 27, 2025 18:01

The order of the court is weird and incomprehensible. The HC in its wisdom has taken steps against CoP. If the SC thinks it is outside the purview of the HC , they should have straightaway cancelled the order of HC. Why there should be a stay? One more addition to the pending cases. In stead of staying the order, the SC should have held a Video Conference with the HC judge and ascertained the basis of his order and disposed it on merits. The best way, the SC thinks is to pass it on to others.


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:39

சட்டம் என்று ஒன்று இருப்பது வெறுமனே வாதிடுவதற்கு மற்றும் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு???அநீதிமன்றங்கள் வெறுமனே கேள்வி கேட்கும் ஜாமீன் கொடுக்கும் ஆனால் தீர்ப்பு வழங்காது.


Ray
ஜன 28, 2025 07:33

நம்மாளுங்க வக்கீலுங்கள்லாம் சோப்ளாங்கிகளாக இருந்தால் என்ன செய்வது வெளியில் என்ன கதறினாலும் அங்கே சரியான நடுநிலையான தீர்ப்பு மட்டுமே வரும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 17:38

சனாதனத்தை ஒழிப்பேன் ன்னு பேசுபவன் மேல இருந்த அத்தனை கேசுகளும் தள்ளுபடி ..... இந்த நூற்றாண்டுக்குள் சனாதனிகள் துடைத்தெறியப்பட வாய்ப்பு ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை