உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வக்ப் சட்ட திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருந்தது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த வக்பு திருத்தச் சட்டத்தை சிலர் எதிர்த்தனர். இது தொடர்பாக சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சிங்வி என பல்வேறு தரப்பினரும் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3s3uwgsx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம்கோர்ட், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இன்று (செப் 15) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. வக்ப் சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:* வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்கப்படுகிறது.* ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதை முடிவு செய்யும் விதிகளை மாநில அரசு வகுக்கும் வரை தடை தொடரும்.* வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாது உறுப்பினர் எண்ணிக்கை 3க்கு மேல் இருக்கக்கூடாது. * முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரமில்லை. சில பிரிவுகளுக்கு மட்டும் தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.* தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை முடிவு செய்ய கலெக்டர் அனுமதிக்கப்பட முடியாது, இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயலாகும். தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கப்படும் வரை, எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

MARUTHU PANDIAR
செப் 16, 2025 18:47

அரசியல் சாசனம் என்பது மாற்றப் படவே கூடாதது அல்ல. கால மாற்றத்துக்கேற்ப நாட்டு நலன் கருதி ஒட்டு மொத்த மக்களின் நலன் பாதுகாப்பு வளர்ச்சி அந்நிய ஆதிக்கத்தை அடக்கி வைத்தல் இவற்றுக்காக தேவை ஏற்படும் போது திருத்தப்படத்தான் வேண்டும். இல்லையேல் ஆவணக்காப்பகத்தில் பூட்டி வைத்து அழகு பார்க்க வேண்டியது தான். கான்கிராஸ் தனது சுய நலத்துக்காக எத்தனை முறை திருத்தியிருக்கு தெரியுமா ?


ManiMurugan Murugan
செப் 16, 2025 00:00

ManiMurugan Murugan அருமை உச்ச நீதிமன்ற த் தீர்ப்பை வரவேற்கிறேன்


Barakat Ali
செப் 15, 2025 22:34

யாருக்கும் வலிக்கக்கூடாது என்று பட்டும் படாமல் ஒரு தீர்ப்பு .... உத்தரவு ..... பருத்தி மூட்டை ஜோக்கு ஞாபகம் வருது ????


Venkat esh
செப் 15, 2025 22:01

தீர்ப்பு பற்றி தெரியாமல் அங்கே சப்பைக்கட்டு கட்டுகிறார்.... எழுதிக் கொடுத்த மாடல் பார்ட்டி யாரோ


நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 20:57

செக்யுலர் நாட்டில் தனிமத சட்டம் எதற்கு என்று எந்த பகுத்தறிவு வாதியும் கேட்கவே இல்லையே ? ஒருவேளை பகுத்தறிய தெரியாமல் முழிக்கிறார்களா ?


செய்தி தளம் E-Paper
செப் 16, 2025 16:25

மதச்சார்பற்ற நாடு என்ற பெயர் இருக்கும் வரை தனிமத சட்டம் ஏற்கத்தக்கது அல்ல. ஒருவேளை இந்து நாடு என அறிவிக்கப்பட்டால் கட்டாயமாக சிறுபான்மையினரை காப்பாற்ற மத சட்டத்தை இயற்றலாம். அதற்கு 2024 வரை வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை. அப்படியே செய்தாலும் உச்ச நீதிமன்றம் தற்போதைய தீர்ப்பு போல மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் பிரதமர் மற்றும் நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அரசியல் சாசனம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆயினும் தற்போது நடைமுறைக்கு ஏற்ப சில திருத்தங்களை கொண்டு வர வேண்டியதும் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டியது காலத்தில் கட்டாயம் ஆகும். சில தீர்ப்புகள் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஒப்புதல் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதல் இருந்தால் சட்டமாக்க வேண்டியது அவசியம். ஒருவேளை தேவைப்பட்டால் மீண்டும் விவாதித்து பாதிக்கப்படுவோம் என கருதும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.


vbs manian
செப் 15, 2025 20:44

நடந்த பல தவறுகளை நீதிமன்றம் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது. தர்மம் நிலைநாட்டப்படவில்லை. கோவில்கள் மசூதிகளாக மாறுவது தொடருமோ.


Tamilan
செப் 15, 2025 20:03

காலம் காலமாக நாடுமுழுவதும் நாட்டுமக்களை அப்பாவிகளை ஏமாற்றி, மிரட்டி, கொள்ளையடித்து சேர்த்துவைத்துள்ள கோடிக்கணக்கான கோடிகள் இந்துமதவாத சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ளவேண்டும். வழிபாட்டு தலங்களை தவிர அனைத்தையும் நாட்டுடைமையாக்கவேண்டும்


Tamilan
செப் 15, 2025 20:00

நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் திரைமறைவு சூழ்ச்சியை கோடிட்டு காட்டியுள்ளார்கள்


Rathna
செப் 15, 2025 17:02

ஹிந்துக்களுக்கு என்று இது போன்று ஒரு சட்டம் உள்ளதா? செகுலர் நாடு என்று எப்போதும் சொல்லும் நீங்கள் இந்த ஒரு மதத்திற்கான சட்டத்தை கேள்வி கேட்க தேவை இல்லையா? 5 வருடம் அந்த மதத்தை சார்ந்தவர் மட்டுமே வக்ப்ற்கு சொத்தை எழுத முடியும் என்பதில் என்ன தவறு? இல்லாவிட்டால் அப்பாவி ஏழை மக்களை மிரட்டி அல்லது கொலை செய்து சொத்தை எழுதி வாங்க முடியும். இது போன்ற அமைப்புகளில் அரசியல் அதிகாரம் கொண்ட நபரே பதவிக்கு வர முடியும். இப்படி இருக்கும் நிலையில் அவன் சமுதாயத்திற்கே என்ன நன்மை கிடைத்தது என்பது உச்ச கோர்ட்டுக்கே வெளிச்சம்.


தத்வமசி
செப் 15, 2025 16:28

பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒரு மசோதாவுக்கு மாநிலங்களில் நியமனம் என்பதை உச்ச நீதி மன்றம் எப்படி உள்ளே கொண்டு வருகிறது ? அதாவது மசோதாவை நிராகரிக்க நீதிமன்றத்தால் இயலாது. ஆனால் குழப்பத்தை விளைவிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை