உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல்கட்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பதில் கேட்கிறது உச்சநீதிமன்றம்

அரசியல்கட்சிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து பதில் கேட்கிறது உச்சநீதிமன்றம்

புதுடில்லி : மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நீதியை மேம்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் கமிஷன் மற்றும் தேசிய சட்ட கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 'நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு விதிகளை ஏற்படுத்த தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நாட்டில் பெருக்கெடுத்துள்ள போலி அரசியல் கட்சிகள், ஜனநாயகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. கடும் அதிருப்தி கடுமையான குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், போதைப் பொருள் கடத்துவோர் மற்றும் பண மோசடி செய்வோர், அந்தந்த அரசியல் கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பெருந்தொகையை பெற்று பதவிகள் வழங்கும் அரசியல் கட்சியினர், நாட்டை அவமதிக்கின்றனர். அவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த எந்த விதி முறைகளும் இல்லை. அதேசமயம், நன்கொடைகளை சேகரிப்பதற்காகவே அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த கட்சிகளின் சில நிர்வாகிகள், போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகின்றனர். சமீபத்தில் 20 சதவீத கமிஷனை கொடுத்து, கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய போலி அரசியல் கட்சியின் செயல்பாடு கடும் அதிருப்தி அளிக்கிறது. அரசியல் என்பது பொதுமக்களுக்கு செய்யப்படும் ஒரு சேவை; பொது நலனை சார்ந்தது. அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு அவசியம். எனவே, அரசியல் கட்சிகளுக்கு என விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தலைமை தேர்தல் கமிஷன் உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் வரம்பிற்குள், அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை, வலுவான ஜனநாயக செயல்பாட்டிற்கு வழி வகுக்கும். ஒழுங்குமுறை எனவே, அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை குறித்த விரிவான அறிக்கையை தயாரிக்க, மத்திய சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு, தலைமை தேர்தல் கமிஷன், தேசிய சட்ட கமிஷன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதி பதிகள் உத்தரவிட்டனர். மனுவில் எந்த அரசியல் கட்சியின் பெயரும் குறிப்பிடாததால், தலைமை தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளின் பெயர்களையும் மனுவில் சேர்க்க, மனுதாரரை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiMurugan Murugan
செப் 13, 2025 23:55

ManiMurugan Murugan அருமை அருமையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் பணம் சம்பாதிக்கவே கட்சி நடத்துபவரகள் உள்ளனர் உதாரணம் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி காசுக்காகவே உள்ள ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இத்தனை க்கும் அந்தக் குடும்பத்தார் சொந்தக் காசு போட்டு ஆரம்பித்த கட்சி இல்லை அதற்கு பணம்கட்டியவர்கள் அந்தக் கால நடிகர்கள் ஆனால தலைமை யாருக்கு அந்த குடுிம்பத்தாருக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் தான் எதிர்கட்சிகளின் ஓட்டை பிரிக்க நாடக வி சி கா போன்ற க் கட்சிகள் கார் கட்சி தி து கா வால் உருவாக்கப்பட்ட தே இப்போது தவெகா கட்சிகளின் இருப்பு வருமானங்கள் வரவுசெலவு வரையறை செய்யவேண்டும் ஒரு கட்சியில் ஒருவர் மீது வழக்கு புகார் சிறை சென்றவர் என்றால் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சட்டம் தேர்தல் ஆணையமும் கொண்டு வரவேண்டுிம் தேர்தல் பதிவு பாத்திரத்தில் கொடுக்கும் சொத்து விவரத்தைவிட அதிகமிருந்தால் அவை மக்கள் கணக்கில் சேர்க்க ப் பட வேண்டும் நீதிமன்றத்தின் கோரிக்கை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவேண்டும்


PROUD HINDU_INDIAN
செப் 13, 2025 18:59

சொன்னதே உங்க திருட்டு திராவிட கழகம் பத்தி தான்


venugopal s
செப் 13, 2025 15:05

உச்ச நீதிமன்றம் முதலில் மத்திய பாஜக அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஒழுங்கு படுத்தினாலே நாட்டில் மற்றவை எல்லாம் தானே ஒழுங்காகி விடும்!


venkatesh
செப் 13, 2025 18:09

kopal வேணு. திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா பண்ண கட்சி வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். போய் முட்டு குடு


theruvasagan
செப் 13, 2025 22:23

போதைப்பொருள் கடத்தல்காரனை அயலக அணி செயலாளராக நியமித்து அழகு பார்த்த கட்சியை யார் ஒழுங்கு போறாங்க.


RAMESH KUMAR R V
செப் 13, 2025 11:49

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்


Haja Kuthubdeen
செப் 13, 2025 11:48

லட்டர்பேட் கட்சிகளை தடை செய்தாகனும்.தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு 5%வாக்குகள் வாங்கனும் என்ற விதியை உண்டாக்கனும்.


Chess Player
செப் 13, 2025 11:47

SC should reduce its Summer vacation. Start working on Saturdays Some reports say, pending cases are 11.5 lakh upwards. Cases are pending for years fir common man but somehow, cases for Thug life and Aishwarya rai are heard without much delay.


சாமானியன்
செப் 13, 2025 11:03

பிராந்திய கட்சிகட்கு கடிவாளம் போடனும். திமுக, அதிமுக கட்சிகளின் வாக்குறுதிகள் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கனும். சாதிக்கட்சிகளையும், மதசார்பு ( குறிப்பாக இஸ்லாம் ) கட்சிகட்கு தனியாக விதிமுறைகள் அமைக்கனும். தேர்தலில் இவையிரண்டையும் வேட்பாளர்களை நிறுத்த அனுமதி கூடாது. எம்.எல்.ஏ, எம்.பி வேட்பாளர்கள் தங்களது தொகுதி பற்றி நன்கறிய நீட் மாதிரி தேர்வை வைத்து வடிகட்டனும். ஐந்து கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கட்கு சீட் கிடையாது.60 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்கட்கு டாக்டர் சர்டிபிகேட் தேவை. மூன்று முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது. பென்ஷன் கட்சிநிதியிலிருந்தே வழங்கனும். தேர்தல் நிதிக்கு 5% ஜிஎஸ்டி வருடாவருடம் போடனும். எந்த இலவசமும் கவர்னர், ஜனாதிபதி சம்மதம் இல்லாமல் வழங்கக் கூடாது. கவர்னர், ஜனாதிபதி, பிரதமர் பற்றி தவறான தகவலை பரப்புபவர்கட்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை. வாய்தா கிடையாது. இவையெல்லாம் அரசியலை தூய்மைப்படுத்தவே. திமுக திருந்தவே இத்தனை கட்டுப்பாடுகள். அப்பா பதவியில் இருந்தால் மகன், பேரனுக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கட்கோ பதவி கிடையாது. எல்லாவிதத்திலும் செக் வைத்து சட்டத்தை இரும்பு போலாக்கனும்.


Barakat Ali
செப் 13, 2025 09:31

10 சதவிகிதமாவது வாக்கு வங்கியைப் பெற முடியாத பிராந்தியக் கட்சிகளைத் அதாவது மாநிலக் கட்சிகளைத் தடை செய்யவேண்டும் ... பல்லுப்படாம செஞ்சு ராஜ்யசபா சீட்டு வாங்குற அசிங்கம் நடக்குது .... இது மிகவும் அவசியம் .....


ஆரூர் ரங்
செப் 13, 2025 09:26

கொலீஜிய முறைக்கு பதிலாக மாற்று வழி ஏற்படுத்துங்கள். சொந்த மருமகனை நீதிபதியாக நியமிக்கும் நேர்மையான முறை நிற்கும்.


Padmasridharan
செப் 13, 2025 09:21

அரசியல்வாதிகள் கோடிகளை சேகரிக்கதான் நிறைய பேர் வருகின்றனர். இந்த கோடியில் பங்கு வாங்குவதற்காக காவலர்கள் சேருகின்றனர். மக்களின் உரிமை வெறும் வோட்டு போடுவது மட்டும்தான் என்றாக்கி விட்டுள்ளனர். கானா கடவுளை வணங்கி காணும் மக்களை ஏமாற்றுகின்றனர்.