உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லட்சத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன்: இந்திய கடற்படை செய்த உதவி

லட்சத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன்: இந்திய கடற்படை செய்த உதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: லட்சத்தீவில் உடல்நலக்குறைவால்பாதிக்கப்பட்ட சிறுவனை, கடற்படை விமானம் மூலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.லட்சத்தீவின் அகாட்டித் தீவில் வசிக்கும் 7 வயது சிறுவன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என லட்சத்தீவு நிர்வாகம் சார்பில் இந்திய கடற்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஐஎன்எஸ் கருடா போர்க்கப்பலில் இருந்து விமானம் ஒன்று, மோசமான வானிலையை பொருட்படுத்தாமல் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோரும் அந்த விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாட்டிற்கு சேவை ஆற்றுவதில் தங்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை இது காட்டுவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Gokul Krishnan
அக் 27, 2025 18:19

கடற் படைகக்கு மிக்க நன்றி அந்த சிறுவன் விரைவில் பூரண நலன் பெற வேண்டும்


RAMESH KUMAR R V
அக் 26, 2025 17:51

அபாரம் தொடரட்டும் மனித நேயம்.


N Annamalai
அக் 26, 2025 17:20

வாழ்த்துக்கள் .


Kannan N
அக் 26, 2025 15:13

காலத்தால் செய்த உதவி ஞாலத்தினும் பெரிது.


முக்கிய வீடியோ