உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காத தமிழக அமைச்சர்கள்: சிவராஜ் சிங் சவுகான் புகார்

மத்திய அரசு கூட்டங்களில் பங்கேற்காத தமிழக அமைச்சர்கள்: சிவராஜ் சிங் சவுகான் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பங்கேற்கவில்லை,'' என பார்லிமென்டில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.இது தொடர்பாக லோக்சபாவில் அமைச்சர் பேசியதாவது: விவசாயத்துறை சார்பாகவும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இரண்டு முறை தமிழகம் சென்றுள்ளேன். தற்போது நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. ஆனால்,அநு்த இரண்டு கூட்டங்களிலும் தமிழக ஊரக வளர்ச்சி அல்லது விவசாயத்துறை அமைச்சர் யாரும் பங்கேற்கவில்லை.திட்டங்களை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாங்கள் தமிழக மக்களையும், கலாசாரத்தையும், மொழியையும் மதிக்கிறோம். நாம் அனைவரும் அன்னை இந்தியாவின் மகன்கள். வேறுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பணிவுடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இன்று பார்லிமென்டில் தி.மு.க., அரசின் மக்கள் விரோத அணுகுமுறையை அம்பலப்படுத்தினார். பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி.,க்கள் புகார் அளித்த நிலையில், மத்திய அமைச்சர் தமிழகம் வந்த போது நடந்த முக்கிய கூட்டங்களில், மாநிலத்தில் உள்ள தி.மு.க., அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

சிந்தனை
மார் 11, 2025 22:04

தமிழகத்து மக்களிலிருந்து எம்எல்ஏ எம்பி அமைச்சர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரே வேலை... தண்ணி போட்டு ஆட்டம் போட்டு தூங்குவது... மக்கள் அதற்காகத்தான் ஓட்டு போட்டு உள்ளார்களா? ...


Mariadoss E
மார் 11, 2025 21:57

வேண்டாத மாமியார் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்....


J.Isaac
மார் 11, 2025 21:52

நாட்டில், ஊரில் தெருவில் ஊளையிடும் தெருநாய் கூட்டங்கள் அதிகமாகி விட்டன.


vivek
மார் 12, 2025 08:25

உன்னை பத்தி யாரு கேட்டா ஐசாக்..


ராமகிருஷ்ணன்
மார் 11, 2025 21:05

திமுக அமைச்சர்கள் நாணல் போன்றவர்கள் காசுக்காக மட்டுமே வேலை செய்பவர்கள். காசு வராது என்றால் நிமிர்ந்து வெட்டி ஜம்ப வீரா வேஷம் போட்டு பிலிம் காண்பிப்பார்கள்


sridhar
மார் 11, 2025 21:04

ஒரு ரூபா கூட தராதீங்க .


Ramesh Sargam
மார் 11, 2025 20:01

கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பங்கு மட்டும் கேட்பார்கள் இந்த தமிழக திமுக அரசு அமைச்சர்கள்.


naranam
மார் 11, 2025 20:00

திமுகவுக்கு கமிசன் தரேன்னு சொன்னா உடனேயே வந்துடுவாங்க.. அதிலும் ஊழல் பண்ண வழியிருக்கு என்று கொஞ்சம் தெரிஞ்சாலும் பறந்து வந்துடுவாங்க..அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கரப்ஷன், கமிஷன் மற்றும் கலெக்ஷன் தான்.


Ray
மார் 11, 2025 19:52

இவர் மத்திய பிரதேச முதல்வரா பதினைந்து ஆண்டுகள் இருந்தார்.இப்போ டில்லிக்கு பேக் பண்ணிட்டாங்க


RAMESH
மார் 11, 2025 19:51

நாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது...ஆனால் நிதி மட்டும் வேண்டும்... கமிஷன் அடிப்பதற்கு..... கேடு கெட்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி


G Mahalingam
மார் 11, 2025 19:37

10 சதவீதம் கமிஷன் வரும் எந்த திட்டமும் திராவிட ஆட்சிக்கு தேவை இல்லை. 40 முதல் 100 சதவீதம் வரும் திட்டம் என்றால் திமுக அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.


சமீபத்திய செய்தி