| ADDED : செப் 16, 2024 08:57 PM
சென்னை: தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதத்தை கடந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் காலம் முடிந்து பல நாட்கள் ஆகி விட்டது. ஆனால் வெயில் தாக்கம் இன்னமும் குறைந்த பாடில்லை. தினமும் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் வெப்பநிலை வழக்கமான ஒன்று தான். வடகிழக்கு பருவமழை தொடங்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலநிலை இப்படி இருக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.இந் நிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதிகம் வெப்பம் பதிவான மற்ற இடங்கள் வருமாறு; மதுரை நகரம் - 104 டிகிரி பாரன்ஹீட் ஈரோடு, தஞ்சை, நாகை - 102 டிகிரி பாரன்ஹீட் சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி - 101 டிகிரி பாரன்ஹீட் கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, அதிராமபட்டினம் - 100 டிகிரி பாரன்ஹீட்