உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசிஎஸ் நிறுவனத்தில் 12,200 ஊழியர்கள் வேலை நீக்கம் ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஊழியர்கள் 12,200 பேரை டிஸ்மிஸ் செய்ய போவதாக டிசிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக டாடா கன்சல்டன்சி (TCS) நிறுவனம் விளங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் கிளைகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் 12,200 பேரை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தினன் முதன்மை செயல் அதிகாரி கிரிதி வாசன் வெளியிட்டு உள்ளார்.அவர் மேலும் கூறி உள்ளதாவது; பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல. செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026ம் ஆண்டு நிதியாண்டில் (அதாவது ஏப்.2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
ஜூலை 28, 2025 17:53

ஐ.டி ஊழியர்களின் நிலை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு .....


G Ramachandran
ஜூலை 27, 2025 20:58

அவர் ஓய்வுக்குப்‌பிறகு நீங்கள் அவருக்குப் பதிலாக தலவராகச் சேர்ந்து அவர் வெளியே அனுப்பியவர்களைத் திரும்ப எடுத்து விடுங்கள்.


Jack
ஜூலை 27, 2025 20:20

அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது ...இது இந்தியாவில் முதல் கட்ட ஆரம்பமாக இருக்க நிறைய வாய்ப்பு ........இந்த ஆட்குறைப்பு படிப்படியாக மற்ற கம்பெனிகளில் தொடரும் ...


M S RAGHUNATHAN
ஜூலை 27, 2025 20:15

It is called trimming or haircut in corporate parlance. The TCS has work force of more than 6 lakhs. This workforce is spread over WORLDWIDE. More so, the Company will apply certain performance yard stick assess and then only give marching orders. There may be good compensation. The company, I think may start with voluntary retirement scheme to with. My guesstimate is in India, the axe may fall on 4000 staff only. Though the company says retrenchment is in middle level and senior level, those staff who are in Bench for quite a long time may also be targetted. These things are inevi in any corporate service. On seeing this even in entry level persons will think of leaving. The early birds will get some offer or other. This attrition of staff may also happen.


சாமானியன்
ஜூலை 27, 2025 19:48

1.ஈ.எம்.ஐ கட்டாததால் நிறைய வீடுகள் ஏலத்திற்கு வரப்போகுது. 2. ஓலா, ஊபர் வருமானம் குறையும். 3. ஓட்டல்களில் கூட்டம் குறையும். 4.எலக்டிரிக் வாகனங்களின் விற்பனை குறையும். 5. ரியல் எஸ்டேட் விலை 10% சரியும். 6.கல்யாணமாகாத பெண்கள் கல்யாணம் ஆகலாம். இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்.


Jack
ஜூலை 27, 2025 20:24

வாய பினாயில் போட்டு கழுவு ..


அப்பாவி
ஜூலை 27, 2025 18:26

கீர்த்தி வாசனுக்கு சம்பள ப்ளஸ் கமிஷன் எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 26 கோடி ஹை. 12000 பேரை நீக்கினாத்தான் அவுரு வீட்டில் அடுப்பு எரியும் ஹை. ரொம்ப பாவம் ஹை.


spr
ஜூலை 27, 2025 17:44

"செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்." இது காலத்தின் கட்டாயம். திறமைசாலிகளாக இருந்தால், வயதும் இருந்தால் பிற சிறு நிறுவனங்களில் வாய்ப்பு கிட்டலாம் இளைஞர்கள் தங்களை இதற்காக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை