மத்திய அரசுக்கு அச்சம்!
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், தன்னிடம் உள்ள உண்மைகளின் அடிப்படையில் சபையில் பேசுகிறார். எந்த விவகாரத்தையும் அவர் மேம்போக்காக பேசுவதில்லை; அதற்குரிய ஆதாரங்களையும் அவர் வழங்குகிறார். நம் தேச பாதுகாப்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினால், மத்திய அரசு அச்சமடைகிறது. - ஜெய்ராம் ரமேஷ் , ராஜ்யசபா எம்.பி., - காங்.,தேச விரோத கட்சி!
நம் நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய டில்லி ஏ.ஐ., உச்சி மாநாட்டில், நம் நாட்டை அவமதிக்கும் வகையில், காங்., போராட்டத்தில் ஈடுபட்டது. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது தேச விரோத கட்சியாக மாறியுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். - சையத் ஷாநவாஸ் உசேன், செய்தித்தொடர்பாளர், பாஜ., எந்த ஆதாயமும் இல்லை!
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தால், நம் நாட்டிற்கு எந்த ஆதாயமும் இல்லை; நம் நாட்டின் பொருட்கள் மீது வரி சுமையை மட்டுமே எதிர்கொள்கிறோம். இது, 'மாஸ்டர் ஸ்டோக்' அல்ல; இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கை. மத்திய அரசு, அமெரிக்காவிற்கு வழங்கிய வரிச்சலுகை. - பவன் கெரா, செய்தித்தொடர்பாளர், காங்.,