உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதியை மையமாக்கி சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது

தலைமை நீதிபதியை மையமாக்கி சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதியை மையமாக வைத்தே செயல்படுகிறது. அதில் மாற்றம் தேவை,'' என, நீதிபதி ஏ.எஸ்.ஓகா தன் பணி நிறைவு நாளில் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதற்காக, வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:உச்ச நீதிமன்றத்தை விட உயர் நீதிமன்றங்கள் ஜனநாயக ரீதியாக செயல்படுகின்றன. உயர் நீதிமன்றங்கள் கமிட்டிகள் வாயிலாக செயல்படுகின்றன. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மையமாக வைத்தே செயல்படுகிறது.புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவி காலத்தில், இதில் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள். அவரது ரத்தத்தில் ஜனநாயக மதிப்பீடுகள் ஊறியிருக்கின்றன.உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நீதிமன்றங்களை புறக்கணிக்கின்றன. விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் சாதாரண மனிதர்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.விசாரணை நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. விசாரணை நீதிமன்றங்கள் துணை நீதிமன்றங்கள் என அழைக்கப்படக் கூடாது. இது, அரசியலமைப்பு மதிப்பீட்டுக்கு எதிரானது. இந்த நீதிபதி பணியை முழு திருப்தியுடன் செய்து முடித்துள்ளேன். வெற்றிகரமான வழக்கறிஞர் நீதிபதியாக பதவி உயர்வு பெறும்போது பெரிய தியாகம் செய்ததாக கூறுவர். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.நீதிபதியாக பணியில் சேர்ந்தால் பெரும் பணம் ஈட்ட முடியாமல் போகலாம். ஆனால், அதில் கிடைக்கும் மனநிறைவு, வழக்கறிஞர் பணியில் கிடைக்காது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ethiraj
மே 25, 2025 11:43

We have self financing colleges ,hospitals ,transport ,telecom etc. Why not govt sponsered courts introduced in our country Court premises can be leased between 7 Am to 12 Am except 52 weekly holidays say on every Wednesday. All cases upto 5 years can be dealt by this sponsered courts


Mecca Shivan
மே 24, 2025 19:00

பாராளுமன்ற அரசியலைவிட சட்டசபை அரசியலைவிட அவ்வளவு ஏன் பஞ்சாயத்து அரசியலைவிட நீதிமன்ற அரசியல் கேவலமாக உள்ளது .. நீதிமன்றங்களிலும் இடது வலது திராவிடம் அம்பேத்கர் என்று பிரிவினை உள்ளது நீதியின் மரணத்திற்கு முதல் படி


Ravi Kulasekaran
மே 24, 2025 14:58

உச்ச நீதிமன்றத்தின் அணுகுண்டு பிரிவு 142 இதனை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வந்து லோக்சபா ராஜ்யசபா இரண்டிலும் முன் தேதியிட்டு நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு மரியாதை


Tetra
மே 24, 2025 12:33

நான் கபில் சிப்பல் மற்றும் அபிஷேக் மனு அசிங்வி என்றல்லவா நினைத்தேன்


baala
மே 24, 2025 11:07

பணியில் இருக்கும் பொழுது என்ன செய்தீர்கள் இதை சொல்லாமல்.


Anantharaman Srinivasan
மே 24, 2025 14:46

எஸ். Retired ஆன அடுத்த நிமிடமே தைரியம் வருகிறது.


c.k.sundar rao
மே 24, 2025 10:33

He was one of the judge in the bench who let off ponmudi on bail when HC of Madras convicted him in corruption case and at the time of retirement talks honestly.


D Natarajan
மே 24, 2025 07:31

இந்த கருத்தை பணியில் இருக்கும்போதே சொல்லி இருக்க வேண்டும்