வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மமதா மாயா... அதாவது காணாமல் போய்விட்டார். மாயாவதி... அவரும் எப்பவோ மாயா.. எப்பவோ காணாமல் போய்விட்டார். யோகிஜியை எதிர்த்து இனி அவரால் அந்த மாநிலத்தில் தலை தூக்க முடியவே முடியாது.
Wrong diagnosis and wrong treatment. Her popularity is a thing of the past.
மாயாவதியும் ராகுலும் கூட்டணி அமைக்க வேண்டும்
ஊருக்கு ஊர் அரசியல் வாதிகளின் சிலைகளை வைத்தே திராவிட மாடல் அரசு முடங்கிற்று அதேபோன்று மாயாவதி அவரது ஆட்சியில் ஊருக்கு ஊர் யானை சிலைகளை அமைத்தது அரசே முடங்கிப்போயிற்று இரண்டும் சிலைகளினால் அரசே அழிந்தது
நல்ல வேலை ஸ்டாலினுக்கு மச்சான் தொல்லை இல்லை.. மகனே எல்லாத்தையும் முடிச்சி வைப்பார்..
அதான் மாப்ள இருக்காரே, போறாதா? மாப்பிளையும், மகனும் சேர்ந்தா deadly cocktail தான்
மாயாவதி கட்சியில் இருந்த இளைஞர்கள் பட்டாளம் இப்போது யோகியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள். ஒத்த சீட்டு என்கிற நிலையில் இனி மாயாவதிக்கு அந்த ஒத்த சீட்டும் காணாமல் போகும் என்கிறது அங்கிருந்துவரும் செய்திகள். இங்கே திருமாவின் நிலைமைதான் அங்கிருக்கும் மாயாவதியின் நிலைமையும். சாதிவாரி கட்சிகள் இந்த ஜென்சி உலகில் வெல்ல முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தோல்வியைச் சந்தித்ததற்கு முக்கிய காரணம் கூட்டணி விஷயத்தில் அவர் எடுத்த தவறான முடிவுதான். மேலும் தலித் சமூகத்தினரின் வாக்குகளை மட்டும் நம்பியிருந்த இவரின் கட்சியில், ஜாதவ் அல்லாத மற்ற இதர தாழ்த்தப்பட்ட மக்கள் பாஜக பக்கம் திரும்பினர். அதுபோக மாயாவதியின் கட்சித் தொண்டர்களே கூட அவரது அராஜக அரசியல்போக்கு பிடிக்காமல் பாதி பேர் பாஜகவில் ஐக்கியமாகினர். தேர்தலின் போது பாஜக நல்லாட்சி கொடுப்போம் என்ற வாக்குறுதி மற்றும் அவர்கள் கூறிய நலத்திட்டங்கள் அங்குள்ள பெரும்பாலான தலித் மக்களை ஈர்த்தது. அந்த ஈர்ப்பு மாயாவதியின் மேல் வெறுப்பாக மாறியது. மேலும் அவர் முதல்வராக இருந்தபோது, லக்னோ மற்றும் நொய்டா போன்ற முக்கிய நகரங்களில் தனது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், தனது சிலைகளையும் ₹50 கோடிகளுக்கும் மேல் அரசுப் பணத்தில் அதிக எண்ணிக்கையில் நிறுவினார். இதெல்லாம் பார்த்து கொதித்துப்போன மக்கள் அத்துடன் மாயாவதியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். எனவே இவர் மீண்டும் உபியில் முதல்வராவதெல்லாம் கனவிலும் கூட நடக்காது.
இப்போ மாயாவுக்கு மட்டும் என்ன மவுசு இருக்கு ??
கட்சிக்கும் சசிக்கும் எவ்விதமான தொடர்பு மில்லை. நான்தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறேன் என்றார் ஜெயா. உண்மைதான். சசி யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. நடராஜன்தான் பட்டியலை முடிவு செய்தார்.
மேற்கு வங்கத்தில் கடந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய காட்டாட்சியில் நடந்த அட்டூழியம் மற்றும் அராஜகம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். சிறுபான்மையினர் (முஸ்லிம்) நலனுக்காக ₹5700 கோடியை ஒதுக்கிய மம்தா இந்துக்கள் அதிகமாக வசிக்கும் வட வங்காளத்திற்கு வெறும் ₹800 கோடியை மட்டும் ஒதுக்கினார். அதேபோல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு வெறும் ₹80 கோடியையும்,தொழில்துறை உற்பத்தி 30% சதவீதத்தில் இருந்து வெறும் 3% சதவீதமாகவும் குறைத்து விட்டார். நாற்பது லட்சம் இளைஞர்கள் மேற்குவங்க மாநிலத்தை விட்டு வெளியேறினர். இந்தியாவிலேயே ஆசிட்வீச்சு தாக்குதல் வழக்குகளில் 28% சதவீதம் வங்காளத்தில்தான் பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், மாநிலத்தில் முன்னுரிமைகள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை பாஜக பெங்கால் மக்களிடம் எழுப்பியதன் விளைவு மேற்குவங்கத்தில் பதினைந்து ஆண்டுகள் நடந்துவந்த மம்தாவின் Jungle Raj ஆட்சி முடிவுக்கு வந்தது.