உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், 'ஆப்பரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நம் ராணுவம் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா உள்ளிட்ட பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சுற்றுலா பயணியர் 25 பேர் மற்றும் குதிரையேற்ற தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர். லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதல், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முகாம்கள் அழிப்பு இதையடுத்து, மே 7ல், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு திகளில் நம் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு செயல்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன; பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. அதேசமயம், பஹல்காமில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி ஜம்மு - காஷ்மீர் முழுதும் முடுக்கிவிடப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் ஷா என்ற ஹாசிம் மூசா, இந்த குற்றச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஸ்ரீநகரில் உள்ள டச்சிகாம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினரின் சினார் கார்ப்ஸ் பிரிவினர் மற்றும் துணை ராணுவப் படையினர், வனப்பகுதியில் உள்ள லிட்வாஸ் என்ற இடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை அடர்ந்த வனப்பகுதி என்பதால், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும் சோதனை நடத்தப்பட்டது. முடிவில், பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கூறப்படும் பகுதியை அவர்கள் நேற்று அதிகாலை நெருங்கினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டை பல மணி நேரம் நீடித்தது. 'ஆப்பரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவரும், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்பதை உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில், ஒருவர் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சுலைமான் ஷா என்ற ஹாசிம் மூசா என்பதும் உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள இருவரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பர்வேஷ் மற்றும் பஷீர் அஹமது ஆகியோரிடம் இறந்தவர்களின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ரைபிள்கள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இறந்த பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பயங்கரவாதிகள் தப்பியோடியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், டச்சிகாம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு, கூடுதலாக மேலும் சில பாதுகாப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிக்கியது எப்படி? பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், 'ஹவாய்' நிறுவனத்தின், 'சாட்டிலைட் போன்' பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் நடந்த ஏப்., 22 முதல் அந்த போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதை, 'டிராக்' செய்யும் பணியில் ராணுவ தொலைத்தொடர்பு துறை ஈடுபட்டு வந்தது. பயங்கரவாதிகள் அந்த சாட்டிலைட் போனை நேற்று முன்தினம் மீண்டும் பயன்படுத்திய நிலையில், சோதனையில் அது டச்சிகாம் வனப்பகுதியில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சுலைமான் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Tamilan
ஜூலை 29, 2025 21:25

மூன்றுமாதங்களுக்கு பின் மூன்றுபேர் மட்டும். மீதமுள்ளவர்கள் எங்கே?. பலமாதங்களாக திட்டம் தீட்டயத்தை அறியாமல் இருந்த குழந்தை மோடி


Rathna
ஜூலை 29, 2025 21:14

செத்த தீவிரவாதிகள் ஆவி இந்திய அரசியல் வ்யாதிகளின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க டெல்லி வந்ததாக கேள்வி. பாகிஸ்தானை விட இவர்களுக்கு ஆதரவு இந்தியாவில் தான் அதிகம் உள்ளது போல தோன்றுகிறது.


மனிதன்
ஜூலை 29, 2025 15:17

ஹெ ஹெ ஹே ஹே... நம்பிட்டோம்... எவனையோ மூணுபேத்த சுட்டுக்கொன்னு, அவனுங்கதான் இவனுங்கன்னு உருட்டுறானுங்க... உண்மையாக பஹலகாம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை அதுதான் உண்மை... நாடகத்தை நிருத்திவிட்டு, உண்மையான நாதாரிகளை ஆதாரத்துடன் பிடித்து கொல்லுங்கள்


karupanasamy
ஜூலை 29, 2025 16:28

அந்த பயங்கரவாதிகளின் நீயும் ஒருத்தன் முதலில் உன்னிடமிருந்து ஆரம்பிக்கலாம்.


theruvasagan
ஜூலை 29, 2025 19:16

கரெக்டா சொன்னீங்க. பயங்கரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பவனும் தீவிரவாதிதான்.


krishna
ஜூலை 29, 2025 20:21

MANIDHAN ILLAI NEE DESA VIRODHA MIRUGAM.


மனிதன்
ஜூலை 29, 2025 20:37

யாரும் ஆதரவு கொடுக்கவில்லை... உண்மையான நாதாரிகளை சுட்டு கொல்லுங்கள் என்றுதான் கூறினேன்... சங்கிகள் என்றாலே திசை திருப்பவும் ,மடை மாற்றிவிடவும் பேர்போனவர்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள்...


நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:23

இவர்கள் அவர்கள் இல்லை என்பதனை எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் , ஒருவேளை உங்கள் வீட்டிலோ , உங்களின் அண்மையிலோ அவர்களை வைத்துக்கொண்டு அவர்கள் கூறுவதால் இப்படி கூறுகிறீர்களா ?


venugopal s
ஜூலை 29, 2025 14:55

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளுடன் இது குறித்து விவாதம் நடத்த ஒப்புக் கொண்டவுடன் தீவிரவாதிகளைப் பிடித்து விட்டார்களே, அதெப்படி முடிந்தது என்று எல்லாம் கேள்வி கேட்டு ஆதாரங்கள் கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்பவர்கள் ஆண்ட்டி இந்தியர்கள்!


vivek
ஜூலை 29, 2025 16:39

அறிவிலி வேணு....தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருவாரு என்று தெரிந்ததும் அப்பல்லோ ஓடிய ஓட்டம் தெரியுமா


Ram Prasath
ஜூலை 29, 2025 18:43

வேணு, அமலாக்கத்துறை ரெய்டு வராங்க னு சொன்ன உடனே துபாய் உடனே எப்படி போறது னு கேட்டியா? தேர்தல் வாக்குறுதியில் இது வரைக்கும் எவ்ளோ நிறைவேத்தி இருக்கீங்க னு கேட்டியா? அதெல்லாம் கேட்க வக்கில்லை, இந்தியா ல ஒரு இடம் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் சேதம் ஆச்சு னு காட்டுங்க பாப்போம். இருக்குறது இந்தியா ல, கூஜா தூக்குறது பாக்கிஸ்தான் க்கா?


krishna
ஜூலை 29, 2025 20:04

SIR NEENGA VERA EERA VENGAAYAM VENUGOPAL AGILA ULAGAUTTAL.COURTESY MURASOLI PLUS 200 ROOVAA COOLIE.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:27

அஜித்குமார் போன்றவர்களை கொலை செய்ய ஏவி விடும் கூட்டத்தை சொல்றீங்களா ? அங்கே உங்களின் கருத்தை பார்க்கவே முடியவில்லை ? ஞான சேகரனின் லீலைகளை வீட்டிற்கு சென்று ரசித்த சாரை சொல்றீங்களா ? உங்க கட்சி கொடியை பெண்களை பதறவைத்த பன்னிகளை கண்டித்த்தீர்களா எங்கேயும் உங்க வாய்ஸ் காணோம் , ஓஹோ 23ம் படத்தில் வரும் அந்த புகழப்படும் மூணு பேரில் ஒருத்தனா


krishna
ஜூலை 29, 2025 12:56

INI 29 JULY ELLA VARUDAMUM NAMMA 200 ROOVAA OOPIS CLUB BOYS KUMBAL EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ RAMESH PREMJI THANJAI MANNAR PONDRA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THUKKA DHINAMAAGA ANUSARIKKUM.


krishna
ஜூலை 29, 2025 12:54

AYYAYO IDHU MIGA KODUMAI.INI DESA VIRODHA MAFIA MAINO CONGRESS DRAVIDA MODEL KUMBAL I.N.D.I KOOTANI 28 JULY ELLA VARUDAMUM THIYAGIGAL DHINAM AAGA ANUSARITHU PODHU KOOTAM NADATHI PAKISTHANAI PAARAATUVAARGAL.APPODHUDHAN INGU UNDU KOZHUTHU VASIKKUM DESA VIRODHA MIRUGA MOORGA KOOTAM VOTTU PODUM.


SP
ஜூலை 29, 2025 12:41

அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அதனை நமது ராணுவம் திறம்பட செய்து வருகிறது. இதோடு இந்த செய்தியை நிறுத்திக் கொள்ள வேண்டும். விவரங்கள் சொல்லக்கூடாது..


Anand
ஜூலை 29, 2025 10:55

இந்த தீவிரவாதிகளை வேட்டையாடிய நமது ராணுவத்திற்கு பாராட்டுக்கள், ஆனால் பாருங்கள் இந்த தேச விரோத கைக்கூலி காங்கிரஸ் இதை பாராட்டமாட்டார்கள், மாறாக அரசை குத்தம் குறை கூறுகிறேன் பேர்வழி என சுத்தி வளைச்சு இந்த தீவிரவாதிகளுக்காக பாகிஸ்தான் தொனியில் முட்டுக்கொடுப்பானுவ. முதல்லே இவனுங்களை அழிக்கணும்.


Venkatesan
ஜூலை 29, 2025 10:31

தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் சேர்த்து பார்க்க வைத்தது த்ராவிஷ மாடலும் கான்கிராஸ் கட்சியும் தான். இதை அந்த மதத்தினர் புரிந்து கொண்டால் சரி.


Srinivasan Krishnamoorthy
ஜூலை 29, 2025 11:06

Islam and worldwide terrorism are seamlessly integrated you cannot blame individual muslims who are aligned to national cause though


BALAMURUGAN JAYARAMAN
ஜூலை 29, 2025 09:47

என்னக்கு மோடிஜி ஆட்சி ரொம்ப பிடிச்சுருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை