வாசகர்கள் கருத்துகள் ( 47 )
மக்களுக்கு ஏன் நீதித்துறையின்மேல் நம்பிக்கை இல்லையென்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இது. இவ்வளவு கொடிய குற்றம் புரிந்த ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையே சரியான தீர்ப்பு. குற்றத்திற்கு மிகவும் குறைந்தபட்ச தண்டனை கொடுக்கும்போது குற்றம் செய்ய எவரும் அஞ்சமாட்டார்கள். நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு இது மாதிரியான குறைந்தபட்ச தண்டனை தருவதும் ஒரு காரணம் என்றால் அது தப்பில்லை
மரண தண்டனை அளிக்கப்படும் வரை டாக்டர்கள் போராடணும் தத்தித்தனமான தீர்ப்புகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.
எதிர்பார்த்த தீர்ப்பளித்த அளித்த நீதிமன்றத்திற்கு கோடானு கோடி நன்றி, விரைவில் மே வ அரசு ரிவ்யூ பெடிஷன் போடுவாங்க குற்றவாளிக்கு மரண தண்டனையாக மாறி ,மமதா தீதிக்கு நல்ல பெயர் கிடைக்கலாம்.
பாலியல் குற்றம் கொலை செய்வது இதற்கு ஆயுள் தண்டனை மட்டும் தானா அடுத்த காந்தி பிறந்த நாள் நேரு பிறந்த நாளுக்கு விடுதலை செய்து விடுவார்கள் கொள்ளை செய்ய பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்து விட்டது வங்காள மாநில மக்கள் போராட்டத்திற்கு இவ்வளவு கீழ்தரமான மரியாதை
எல்லாம் அவன் செயல் என்ற தமிழ் திரை படத்தில் ,(மலையாளத்தில் சிந்தாமணி கொலகேஸ் ) இதே போலொரு மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய படுவார், பழி வேறு நபர்கள் மீது விழும், இந்த தீர்ப்பு அந்த படத்தை நினைவு படுத்துகிறது, ஆனால் அந்த படத்தில் உள்ளது போல திறமையான வழக்கறிஞர் இந்த கொல்கத்தா வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்காதது துரதிருஷ்டம், மிக மிக அநியாயம்.
அந்த பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்தின்போது போராடியதற்கான ஆதாரம் இல்லை என்று கடந்த மாதம் சொல்லப்பட்டது .... அப்போதே நினைத்தேன் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று .........
ஆயுள் தண்டனை பெற்று சிறை செல்லும் அந்த குற்றவாளியின் தண்டனை காலம் முழுவதற்கும் ஆகும் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவீனைங்களை தீர்ப்பளித்த நீதிபதியின் சம்பளம் மற்றும் பென்ஷன் பணதிலிருந்து அரசாங்கம் பிடித்தம் செய்யவேண்டும். தூக்கு தண்டனை பெறவேண்டிய இந்த மிருகம் வாழ்நாளை ஏன் மக்கள் வரிப்பணத்தில் சாப்பிட்டு கழிக்கவேண்டும். .?? அநீதி துறை, இவனை வாழவிட்டு வாழ்கிறது வயித்து பொழப்புக்கு.. வாழ்க கொலீஜியம், வளர்க வயிறு.
ஒவ்வொரு நீதிபதியும் அவரவர் விருப்பப்படி தீர்ப்பு வழங்குகிறார்கள். சட்டப்படியான தீர்ப்பாக இருந்தால் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை ஒரே தீர்ப்பாகத்தான் இருக்கும். எனவே பாரபட்சம் பார்க்காமல் நடுநிலையோடு ஒரு தீர்ப்பை வழங்க முடியும் என்றால் அதை செயற்கை நுண்ணறிவு நீதிமன்றம் மட்டுமே வழங்கும். இப்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை நாளடைவில் குறைத்துக்கொண்டு மேற்படி செயற்கை நுண்ணறிவு நீதிமன்றம் ச்ரயல்படுத் முடியுமா என்று பரிசீலனை செய்யவும்.
இந்த தீர்ப்பு சரியானது அல்ல. கேரளாவில் காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கே மரண தண்டனை கொடுத்தது பெண் என்று பாராமல். இது கொடூர கொலை ஆகையால் மரண தண்டனை தான் வழங்கிருக்க வேண்டும்.
எதிர்பார்த்த தீர்ப்புதான் வாங்கப்பட்ட தீர்ப்பு நீதி துறைக்கே அவமானம்