உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்

சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6x2al6eb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பதி தேவஸ்தானத்தில உதவி நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் ராஜசேகர் பாபு. அண்மையில் ஹிந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அவர், வாரம்தோறும் சொந்த ஊரான புத்தூர் சென்று அங்குள்ள சர்ச்சில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக தெரிகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபுவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனையை ராஜசேகர் பாபு மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர். இந் நிலையில், அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகர் பாபுவை தேவஸ்தான நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா பிறப்பித்து இருக்கிறார்.முன்னதாக, இதே காரணங்களுக்காக தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 18 பேர் பணியிடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Sivagiri
ஜூலை 14, 2025 00:57

தமிழ்நாட்டு கோவில்கள் அனைத்திலும் , அறநிலைய துறையிலும் , , ,செக் பண்ணனும் , அதே போல இட ஒதுக்கீட்டில் பலனடைந்தவர் ஹிந்துதானா என்பதையும் ஒரு பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டியது அவசியம் . . மதம் மாறி விட்டால் ஜாதி வாரி ஒதுக்கீட்டில் உள்ளே வர முடியாது , என்பதை பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டும் , , ,


Sivak
ஜூலை 09, 2025 14:16

ஏசப்பா கொடுத்த பரிசு ... திருட்டு பசங்களுக்கு எந்த கடவுளை இருந்தாலும் தண்டனை கொடுக்கிறார் ...


lana
ஜூலை 09, 2025 13:57

ஏங்க wakf board அடுத்த மதத்தை அதன் கோவில் எல்லாம் என் சொத்து ன்னு சொல்லும் போது அடுத்த மதத்தை சேர்ந்தவர் கேள்வி கேட்பார்கள் தானே. நான் நியாயம் கேட்கும் இடத்தில் ஒரே மதம் இருந்தால் எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று


Raajanna
ஜூலை 09, 2025 13:44

ஜாதி மதங்கள் தந்திர குள்ளநரிகள் கண்டுபிடிப்பு. இறைவன் முன் இவை ஏதுமில்லை. ஒன்றே மனித குலம் ஒருவனே தேவன்.


Mariadoss E
ஜூலை 09, 2025 13:33

தனது கடவுள் நம்பிக்கைக்காக பதவி இழந்தவர் பாராட்டுக்குரியவர்....


Elango S
ஜூலை 09, 2025 15:12

இதில் என்னபாராட்ட வேண்டி இருக்கு அவர் பணி புரியும் நிறுவனத்தின் விதிமுறைகள் தெரியும் மதம் மாறியதை முன்னரே தெரிவித்து இருக்க வேண்டும் ஏன் திருட்டு தனமாக திருமலையில் இந்து கோயிலில் பணி புத்தூரில் கிறுஸ்துவ தேவாலாய வழிபாடு


Nachiar
ஜூலை 10, 2025 18:10

அந்த கடவுளை ஏன் ஒழித்து வைத்து இருந்தான் உங்கள் பாராட்டுக்குரியவன். ஏமாற்றுப் பேர்வழி. ஜெய் ஹிந்த்


Nachiar
ஜூலை 10, 2025 18:33

கவலை படாதீர்கள். சர்ச்சில் அவருக்கு வேலை கிடைக்கும் இதை விட பெரிய சம்பளத்தில். ஜெய் ஹிந்த்


Mariadoss E
ஜூலை 09, 2025 13:32

எம்மதமும் சம்மதமே.....கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாமே இறைவன் வாழும் இடம். அங்கே போகாதே, இங்கே போகாதே என்று சொல்லும் மனிதன் தான் குறுகிய மனம் படைத்தவன்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 14:32

மசூதிகளில் இறைவன் வாழ்வதாக கூறுவதை இஸ்லாமியர் ஏற்பார்களா? பைபிள் (ஆதாரம். கோரிந்தியர் பத்து). திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற சிலை வழிபாட்டையும், அதற்குப் படைக்கப்பட்ட பிரசாத்தை உண்பதையும் எதிர்க்கிறது.


subramanian
ஜூலை 09, 2025 15:11

எல்லா சர்ச்சுக்கும் எல்லோரும் போக முடியுமா? கதை உடறீங்க ?


Elango S
ஜூலை 09, 2025 15:15

உங்கள் மதத்துக்கும் இது பொருந்துமே எத்தனை அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளிகளில் கிறிஸ்துவ ஆசிரியர்கள் அதிகமா அல்லது மாறறு மதத்தினர் அதிகமா


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 23:54

மதம் மாறியபின் திருப்பதி கோயில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சர்ச்சில் வேலைக்கு போக வேண்டியது தானே. எதுக்கு வாரகடைசியில் திருட்டு வழிபாடு..?


Nachiar
ஜூலை 10, 2025 18:30

எம் அந்தமும் சம்மதம் என்று சொல்லிய மஹான் அந்நிய அதை மதங்களுக்கு சொல்லவில்லை, இந்தியாவில் பிறந்த இந்து மதங்களுக்கு குறிப்பாக சைவம் வைணவம் சாக்தம் கௌமார உட் பிரிவுகளுக்குத் தான் சொன்னார் சிறப்பாக அந்நிய ஆதிக்கத்திலிருந்து காப்பாற்ற. இறைவன் வாழ்ந்து அருளும் இல்லமான கோவிலுக்குப் போகும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் இந்துக்களுக்கு உண்டு.ஆனால் அது அந்நிய மதங்களுக்கு இல்லை. அதனால் பிற மதங்களை சார்ந்தவரிடம் அதை எதிர்பார்க்கவும் முடியாது. அடுத்து இறைவனை ஒவ்வொரு ஆன்மாவிலும் தேடும், மறு பிறவியில் நம்பிக்கை வைத்து தர்மம் போதிக்கும் சமயமும் மோட்சத்தில் இருக்கும் இறைவனை நாடும் ஒரு பிறவியுடன் மோட்ச நரஹத்துக்குப் போகும், நீதி நாள் வரும் வரை judgement day rest in peace போதிக்கும், இறைவனை மனித ஆண் வடிவத்தில் மட்டும் வணங்கும் மதங்களும் ஒன்றாக முடியாது. பிற மதங்களுக்கு மரியாதை கொடுப்பது வேறு எல்லாவற்றையும் நம்பு என்று சொல்லுவது எதிர்பார்ப்பது மூடத்தனமானது. மதம் அவரவர் நம்பிக்கை என்பதை மதித்து இருப்போம் தலையிடாமல். ஜெய் ஹிந்த்


Ganapathy
ஜூலை 09, 2025 12:48

மதச்சார்பற்ற நாசமாப்போன செகுலரிசம் ஒழியணும்.


எஸ் எஸ்
ஜூலை 09, 2025 12:03

இந்நேரம் ஜெகன் மோகன் பதவியில் இருந்தால் இவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கும்


எஸ் எஸ்
ஜூலை 09, 2025 12:04

இந்நேரம் ஜெகன் மோகன் பதவியில் இருந்தால் இவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கும். தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம்..


Muralidharan S
ஜூலை 09, 2025 12:03

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையிலும் இப்படி களையெடுக்க வேண்டும். ஆனால், இதற்க்கு, இது கிருஸ்துவர்களால் உருவாக்கப்பட்ட கிருஸ்துவர்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் திராவிஷா மாடல் கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் மட்டும் அல்லாது மொத்தமாக தலை முழுக்க வேண்டும்.


mermos
ஜூலை 09, 2025 13:55

அப்படி யார் சொன்னது. கலவரத்தை தூண்டும் உன்னை குண்டாஸில் உள்ளே போடணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை