உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 31 முறை கத்தியால் குத்தி கொன்ற இருவர் சரண்

31 முறை கத்தியால் குத்தி கொன்ற இருவர் சரண்

ராய்ச்சூர்: தன் அண்ணன் கொலைக்கு காரணமான நபரை, 31 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தவரும், அவரது நண்பரும் போலீசில் சரணடைந்தனர்.ராய்ச்சூர், பங்கிகுன்டா பகுதியில் சென்று கொண்டிருந்த சையத் காதர், 43, என்பவரை பைக்கில் வந்த இருவர், 31 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் கடந்த 15ம் தேதி நடந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், கொலை செய்த இருவரும் சதர் பஜார் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்தவர்கள், ராய்ச்சூரை சேர்ந்த அன்வர், 22, தப்பன்னா, 21, என்பது தெரிய வந்தது.முக்கிய குற்றவாளியான அன்வரின் அண்ணன் கலந்தர். இவரும், கொலை செய்யப்பட்ட காதரும் நண்பர்களாக இருந்தனர். தெலுங்கானாவில் உள்ள காதரின் உறவினர்களிடம் யாரோ சிலர் பிரச்னை செய்துள்ளனர். இதை தட்டி கேட்க காதர், கலந்தரை அழைத்துச் சென்றார்.அங்கு நடந்த சண்டையில் கலந்தர் கொலை செய்யப்பட்டார். இதை அறிந்த கலந்தரின் தம்பி, காதரால் தான் தன் அண்ணன் கொலை செய்யப்பட்டார் என ஆத்திரத்தில் இருந்தார்.இதனால், அவர், தன் நண்பர் தப்பன்னாவுடன் இணைந்து, காதரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை