உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை ஆதரித்த இரு பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்

பயங்கரவாதிகளை ஆதரித்த இரு பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளை முடக்கும் வகையில், ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு இடங்களில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ரியாசி மாவட்டத்தின் மஹோரில் உள்ள கல்வாவில் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய குலாப் ஹுசைனின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தன. இதையடுத்து, அவரை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ - தொய்பா அமைப்பிற்கு தேவையான உதவிகளை குலாப் ஹுசைன் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரியாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் பணியிலும், பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மற்றொரு ஆசிரியரான மஜித் இக்பால் தார், தந்தை இறந்த பின் கருணை அடிப்படையில், ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டார். ரஜவுரி மாவட்டத்தில் பணியாற்றிய இவர், லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கு நம்பகமான நபராக இருந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத செயலுக்கான நிதியை சேகரித்தல், ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், நாச வேலைகளை அரங்கேற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2023ல், ரஜோரியில் வங்கி அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை மீட்கும்போது, மஜித் இக்பாலை போலீசார் கைது செய்தனர். குலாப் ஹுசைன், மஜித் இக்பால் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், அரசுப் பணியில் இருந்து இருவரும் நேற்று நீக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை, ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venugopal, S
அக் 31, 2025 08:16

என்கவுன்ட்டர் ஒன்றே வழி


c.mohanraj raj
அக் 31, 2025 07:59

இவர்களை மட்டும் இல்லை இவர்கள் குடும்பத்தையும் நாடு கடத்த வேண்டும்


நிக்கோல்தாம்சன்
அக் 31, 2025 07:07

இவர்களின் குடும்பத்திற்கு எந்த அரசு சலுகைகளும் கிடையாது என்ற வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும்


வாய்மையே வெல்லும்
அக் 31, 2025 06:58

நம்மூரு கொசுத்தொல்லை நாராயண / இந்தியன் / பொய்க்குண்டு இத்யாதி சாகிபுக்கள் நிரம்பு புடைக்க கைமுஷ்டியை பிதுக்குவாங்களே.. எல்லாம் இநபாசம் .. நாடு நாசமாக போகட்டும் என எண்ணம் படைத்த திரூட்டு புத்தி ஆளுங்க


இந்தியன்
அக் 31, 2025 04:44

இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும்.


naranam
அக் 31, 2025 02:40

அடங்கவே மாட்டாங்களோ!


RAJ
அக் 31, 2025 02:03

எத்துனை மாணவர்கள் பாதிக்கப்பர்டு உள்ளார்களோ இவர்களால் ...