உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசமும் பாகிஸ்தான் போல் மாறினால்... இதுதான் நடக்கும் என்கிறார் மத்திய அமைச்சர்

வங்கதேசமும் பாகிஸ்தான் போல் மாறினால்... இதுதான் நடக்கும் என்கிறார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வங்கதேசம் பாகிஸ்தான் போல மாறினால் முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய யோசிப்பார்கள்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கிரிராஜ் சிங் பேசியதாவது: ஜவுளித்துறையில் இந்தியா ஒரு பெரிய சந்தையாக திகழ்கிறது. வங்கதேசம் பாகிஸ்தான் போல மாறினால் முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய யோசிப்பார்கள். அங்கு புதிய அரசு கட்டுபாடுகளை மாற்றிவிட்டது. விரைவில் வங்கதேசம் பாகிஸ்தானுக்கு பெரிய சகோதரனாக மாற முடியும். அரசு மாற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தவிர்க்கலாம்.

3.5 கோடி வேலைவாய்ப்புகள்

வரும் 2030க்குள் ஜவுளித்தொழிலில் உள்நாட்டு உற்பத்தி 350 பில்லியன் டாலராக உயரும். இதனால் மேலும் 3.5 கோடி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜவுளித்துறையில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் முயற்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Muralidharan raghavan
செப் 05, 2024 15:56

பாகிஸ்தான் வளர முடியாமல் போனதற்கு தீவிரவாதம்தான் காரணம். ஆனால் அதே நேரத்தில் வங்கதேசம் ஆடை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்து பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தது. தற்போது அந்த நாட்டுக்கும் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. அங்கு அமைதி இல்லாததால் ஆடை இறுக்குமதியாளர்கள் நமது நாட்டை நோக்கி வருவார்கள். ஆனால் தீவிரவாதிகளால் நம்நாட்டிற்கு தொல்லை ஏற்படும்


Sivagiri
செப் 05, 2024 09:05

வெஸ்ட் பெங்கால் மம்தா - ஆட்சியில் இருக்கும் வரை ,, பங்களாதேசுக்கு , யோக திசைதான் ,, எந்த பிரச்சினையும் இல்லை , ஆனால் இந்தியாவுக்கு மற்றுமொரு காஷ்மீர் உருவாகும் ,, ஒரு நிமிடம் கூட தாமதிப்பது , இந்தியாவுக்கு , காஷ்மீரை விட அதிக பிரச்சினை . . . ஏனென்றால் , பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இமயமலை பாதுகாப்பு உள்ளது , ஆனால் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆனால் , இந்தியாவுக்கு , எந்த பாதுகாப்பும் இல்லை , இன்றே இப்போதே உஷார் ஆவது சாலை சிறந்தது . . . மம்தாவை வைக்கும் இடத்தில வைத்தால் , நாட்டுக்கு நல்லது . . .


சமூக நல விரும்பி
செப் 05, 2024 08:33

அந்நிய நாட்டு கைக்கூலிகள் வேலை


GMM
செப் 05, 2024 07:55

விவசாயம், நெசவு மிக அதிக மக்களின் தொழில். விவசாயி, நெசவாளி யார் என்று வரையறுக்க வேண்டும். குல தொழில், விருப்ப தேர்வு அடிப்படையில் பதிவு. நாடு முழுவதும் இவர்களுக்கு மத்திய அரசு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். பருத்தி முதல் துணி, வியாபாரம் வரை நெசவு என கருத வேண்டும். உற்பத்தி திறன், மனித சக்தி அறிந்தால், தலைமையிடம் இந்தியா அடைய முடியும். பாக். பங்காதேசில் தொழில், முதலீடு இருக்காது. இந்தியா, சீனா சேர்ந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். சீனா இந்தியாவுடன் மோதினால், தீவிர வாதம் இந்த பகுதியில் பரவி விடும்.


Sampath Kumar
செப் 05, 2024 07:55

அப்படிங்கள அய்யா இங்க மட்டும் என்ன வாழ்த்து மாநிலத்துக்கு மாநிலம் காக்கை பார்ப்பது போல உலகம் muluvathum sentru muthaletalarkalai kavarnthu வருகிறார்களே ஏன் ? உங்க பிஜேபி ஆட்சில் நீக்கல் எதனை முதலீட்டாளர்களை கவர்ந்து ஏத்தனை திட்டல்களை கொண்டு வந்தீர்கள் என்று உள்ள முடியுமா ? முடியாது நொண்டி குதிரைக்கு சரிகினால் சாக்கு


Chandran,Ooty
செப் 05, 2024 08:55

இரண்டு வரிக்கே அம்புட்டு தப்பு விடுவ இதுல பெரிய கட்டுரையை தப்பு தப்பா எழுதியிருக்க எப்படிய்யா இப்படி சம்பத்து