உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., - பா.ஜ.,வில் மோதல்-; ஆர்.எஸ்.எஸ்., சமரசம்!

உ.பி., - பா.ஜ.,வில் மோதல்-; ஆர்.எஸ்.எஸ்., சமரசம்!

யோ கி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வராக, முதன் முறையாக 2017ல் பதவியேற்றார். 2022ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல், 2027 மார்ச்சில் நடைபெற உள்ளது; மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க, பா.ஜ., பல அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது.ஆனால், கட்சிக்குள் உள்குத்து ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக உள்ள கேசவ் பிரசாத் மவுரியாவிற்கும், யோகிக்கும் ஆகாது. தன் எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார் மவுரியா. ஆர்.எஸ்.எஸ்., வாயிலாக கட்சிக்குள் வந்தவர் இவர், 2017ல் பா.ஜ., ஆட்சியைப் பிடித்த போது, 'இவர்தான் முதல்வர் ஆவார்' என பேசப்பட்ட நிலையில், யோகி முதல்வரானார். அதிலிருந்து இருவருக்குமே பிரச்னை. இவரைத் தவிர, இன்னொரு துணை முதல்வரும் உள்ளார்; அவர் பிரிஜேஷ் பாடக்.கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ., எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; இதிலிருந்து, யோகி மீது கட்சிக்குள் உள்குத்து வேலைகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் இந்த இரண்டு துணை முதல்வர்களையும் தனித்தனியாக சந்தித்து, ஆலோசனை நடத்தி உள்ளார்.பா.ஜ., வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களும் தலைவர்களும் இதுவரை களப்பணியாற்றி வருகின்றனர்; ஆனால், இவர்கள் பெயர் வெளியே தெரியாது. தங்கள் இயக்கத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் இந்த தொண்டர்கள் கடுமையாக வேலை செய்பவர்கள்.உ.பி.,யில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இப்போதே தங்கள் வேலைகளைத் துவங்கிவிட்டது ஆர்.எஸ்.எஸ்., இதன் முதல் கட்டம் தான், துணை முதல்வர்களுடன் பாகவத் சந்திப்பு என்கின்றனர். 'எந்தவித கட்சி பூசலும் இல்லாமல், பா.ஜ., வெற்றி பெற வேண்டும்' என, பாகவத் அறிவுரை கூறியுள்ளதாக சொல்லப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

P. SRINIVASAN
பிப் 22, 2026 08:35

உபியில் மட்டுமல்ல, இந்த நாட்டிலே நடக்கும் எல்லா கலவரத்துக்கு RSS தான் காரணம்..


N Sasikumar Yadhav
பிப் 22, 2026 10:20

மர்ம நபர்கள் போடுகிற ஜோத்பூர் ஸ்பெஷல் ஆட்டுப்பால் விசுவாசமாக இருக்கிறீர்கள் நீங்க . நாடும் உலகமும் அமைதியாக இருக்க பாடுபடுகிறது ஆர்எஸ்எஸ் ஆனால் உலக அமைதிக்கு பாதகமாக செயல்படுகிற ஆட்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர் நீங்க


Rathna
பிப் 22, 2026 11:31

அந்த மாதிரி அமைப்புகள் இல்லாவிட்டால் உங்களை போன்ற நபர்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ முடியாது. மர்ம நபர்கள் உங்கள் வீட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்.


Rajendra kumar
பிப் 22, 2026 12:51

இவ்வளவு அறியாமையில் நீங்கள் வைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத இயக்கம். நாடு மட்டுமே உயிர். தேச நலன், நம் கலாசாரம் காப்பது & தேச முன்னேற்றம் மட்டுமே கொள்கை. சாதி மத ஏற்றத்தாழ்வு அங்கு இல்லை. அனைத்து பிரிவிலிருந்தும் சேவகர்கள் சுயநலமில்லாத பணி செய்கிறார்கள். வெளியிலிருந்து கொண்டு அதன் தியாக வரலாற்றை கொச்சை படுத்த கூடாது.


vivek
பிப் 22, 2026 13:16

கொத்தடிமை எப்போதும் அலறல் சத்தம் தான்


ராஜேந்திரன்,கமுதி
பிப் 22, 2026 13:20

முதலில் நீ உண்மையான பேர்ல கருத்தை போடு..


தாமரை மலர்கிறது
பிப் 22, 2026 03:48

ஆர் எஸ் எஸ் உதவியின்றி தான்தோன்றி தனமாக தானே முதல்வர் ஆகமுடியும் என்று யாரும் நினைத்தால் அது கானல் நீர் தான். பிஜேபியின் வேர் ஆர் எஸ் எஸ் என்பதை யாரும் மறக்க கூடாது. மறுப்பவர்களை கட்சியிலிருந்து தூக்கியெறிவது பிஜேபிக்கு நல்லது. கொள்கை தான் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் ஏஜென்ட் பிஜேபிக்கு முக்கியமே ஒழிய தலைவர்கள் ஒருபோதும் கிடையாது. தலைவர்கள் வருவார்கள் போவார்கள். கொள்கை நிரந்தரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை