உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ப்பு பூனை இறப்பை தாங்க முடியாத சோகம்: உயிரை மாய்த்துக் கொண்ட உ.பி., பெண்

வளர்ப்பு பூனை இறப்பை தாங்க முடியாத சோகம்: உயிரை மாய்த்துக் கொண்ட உ.பி., பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு பூனை இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், 32 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.உ.பி.,யின் அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா(32). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டில்லியைச் சேர்ந்தவருடன் திருமணம் ஆகியது. பிறகு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பூஜா விவாகரத்து செய்துவிட்டார். பிறகு சொந்த ஊர் திரும்பி தாயாருடன் வசித்து வந்தார். தனிமையை போக்க அவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அதன் உடனேயே பெரும்பாலான நேரத்தை செலவழித்து வந்தார். இந்த பூனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்த போனது. இதனையடுத்து அதனை அடக்கம் செய்துவிடலாம் என பூஜாவிடம் அவரது தாயார் கூறினார். ஆனால் அதனை ஏற்காத இவர், பூனை மீண்டும் உயிர்பெற்று திரும்பும் என்றார். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து, அந்த பூனையை அடக்கம் செய்யலாம் என மீண்டும் கூறினார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற அவர் கதவை பூட்டிக் கொண்டார். நீண்டநேரம் ஆகியும் மகள் வெளியே வராததால், அந்த அறைக்கு சென்று பார்த்த போது, பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில், பூனையின் உடலும் இருந்தது.தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
மார் 03, 2025 08:17

கணவனுடன் வாழ முடியவில்லையா ..அல்லது கணவனால் இவருடன் வாழமுடியவில்லையா ?


Karthik
மார் 02, 2025 21:56

இந்த பூனை கண்ண மூடிட்டா அப்புடியே உலகம் இருண்டுடுமாம். வாழத் தெரியாத கோழை. கோழைகள் பூமிக்கு பாரமே..


Laddoo
மார் 02, 2025 21:42

வளர்ப்பு பூனைகளின் உயிர் பிரிவு தாள முடியாதது. ரிப் இருவருக்கும்.


முக்கிய வீடியோ