உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராதது ஏன்; அமெரிக்கா தடுத்து விட்டது என்கிறார் சிதம்பரம்

பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தராதது ஏன்; அமெரிக்கா தடுத்து விட்டது என்கிறார் சிதம்பரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்பையில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 175 பேரை கொன்ற 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 175 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது உறுதியானது. இந்த சம்பவத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.அவர் கூறியதாவது: 26/11 சம்பவத்துக்கு இந்தியா பதிலடி தராமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகள் நிர்பந்தம் கொடுத்தன. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸ், இந்தியா வந்து பிரதமர் மற்றும் என்னை சந்தித்து போர் தொடங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். பதிலடி தருவது பற்றி பிரதமர் மற்றும் தொடர்புடைய மற்றவர்களுடன் விவாதித்தேன். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது பிரதமரும் இது பற்றி விவாதித்தார். இந்த சம்பவத்துக்கு நேரடியாக பதிலடி தர வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதில் வெளியுறவு அமைச்சகம் முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பாஜ பதிலடி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:17 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நாடு அறிந்ததை ஒப்புக்கொள்கிறார். 26/11 சம்பவம் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக தவறாகக் கையாளப்பட்டது. இந்த பதில் மிகவும் தாமதமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

panneer selvam
செப் 30, 2025 23:02

So Chidambaram sir , you and your mouni Prime Minister Manmohan ji decided not to punish the culprit just because of America requested while Modi ji just bombed and destroyed the terrorists in their camp in Pakistan . Who is better


Ramesh Sargam
செப் 30, 2025 23:01

அமெரிக்கா தடுத்துவிட்டது என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லை? நீங்கள் என்ன அமெரிக்க அடிமைகளா?


D Natarajan
செப் 30, 2025 21:10

இந்த ஆளுக்கு கட்டம் கட்டப்பட்டு விட்டது


Varadarajan Nagarajan
செப் 30, 2025 21:06

அவ்வாறு பதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க கைமாறாக என்ன கிடைத்தது என்பதையும் தெரிவித்தால் நாட்டு மக்களும் தெரிந்துகொள்வார்கள். வெளிநாட்டு அழுத்தங்ககள் தற்பொழுது இல்லாமலா உள்ளது? அது என்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கும். நாம்தான் தெளிவாக இருக்கவேண்டும். நமது சாதக பாதங்களை பற்றியும் நமது நாட்டு நலன் பற்றியும் நாம்தான் சிந்தித்து செயல்படவேண்டும். நீங்கள் வெளியுறவுத்துறையில் இருந்தபோது இருந்த வெளிநாட்டு உறவுகளோடு தற்பொழுதுள்ள நிலையையும் சீர்தூக்கிப்பாருங்கள். தாங்கள் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைமை, வரி வசூல், தனி நபர் வருமானம், நமது ராணுவ பாதுகாப்பிற்கான செலவினம், பங்குசந்தை நிலவரம் போன்ற அனைத்தையும் தற்பொழுதுள்ள நிலமையுடன் ஒப்பிட்டு பாருங்கள். மொத்தத்தில் இந்தியனாகவும், தேச நலனுக்காகவும் இருங்கள்


N S
செப் 30, 2025 19:46

என்னால் முடியவில்லை. யார் மீது பழி போடலாம்? எனவே எங்கள் ஆட்சியில் நாங்கள் மற்ற நாட்டு தலைவர்கள் சொல்வதை பின்பற்றினோம். அதனால் தான் பக்கத்துக்கு நாட்டு காரன் அசச்சடிக்க மெஷின் கொடுத்தோம்.


hariharan
செப் 30, 2025 19:05

புல்வாமா தாக்குதலுக்கு பாலக்கோட் தாக்குதல் மூலம் அடுத்த 12 நாட்களில் இந்தியா பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவை, தான் ஒரு இந்தியன் என்ற ஒரு நினைப்பு கூட இல்லாமல் கேலி செய்தவர் இந்த மகா ஞானி.


ஆரூர் ரங்
செப் 30, 2025 18:48

நேரு குடும்பத்துடன் ஏதோ மனஸ்தாபம்? இனிமே கட்சி உருப்படாது ன்னு புரிஞ்சு போச்சா?


N S
செப் 30, 2025 19:43

அய்யா, தவறு. காந்தி குடும்பம் என குறிப்பிடுங்கள். நாங்கள் நேருவை மறந்து வெகு காலமாகிவிட்டது.


M S RAGHUNATHAN
செப் 30, 2025 21:41

அது நேரு குடும்பமோ அல்லது காந்தி குடும்பமோ அல்ல. இத்தாலிய மாஃபியா குடும்பம். உண்மையான காங்கிரஸ் 1969 இல் இந்திராவால் முடிக்கப் பட்டது. பின்பு இந்திரா காங்கிரஸ் ஆகி இப்போ இத்தாலி காங்கிரஸ் ஆகிவிட்டது. இது ஒரு போலி குடும்பம். காந்தி பெயரை வைத்து நாட்டை ஏமாற்றும் குடும்பம்.


Vijay D Ratnam
செப் 30, 2025 18:43

இதுதான் நரேந்திர மோடிக்கும் ஒங்க காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம். நீங்க பாகிஸ்தான் அடிச்சா அமெரிக்காவிடம் போயி அடிச்சிட்டான்னு ஒப்பாரி வைப்பீங்க. மோடி எவன்கிட்டயும் கேட்கமாட்டார். நம் நாட்டுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்றதுக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து மரண அடி கொடுப்பது, பயங்கரவாத தளங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டு நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுகுங்கடான்னு இருப்பது.


Modisha
செப் 30, 2025 18:37

ஒரே ஒரு சிறு படகில் கராச்சியில் இருந்து மும்பை வரை பத்து தீவிரவாதிகள் வந்த போதே அன்றைய இந்தியா தோற்று விட்டது .


raj seedtech
செப் 30, 2025 18:32

R u in Coma Mr Chidambaram


புதிய வீடியோ