வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழ் நாட்டுக்கு ரெம்பநாள் கழித்து இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி கிடைத்துள்ளது. அதுவும் திருப்பூர் கொங்கு பகுதியில் அதிக மக்கள் வாழும் விவசாய மக்களின் ஒரு விவசாயி.
புதுடில்லி: தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Galleryதேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பார்லிமென்ட் உறுப்பினராக, கவர்னராக உங்களின் பங்கு அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. https://x.com/AmitShah/status/1957104038354604367உங்கள் பரந்த அனுபவமும் ஞானமும் ராஜ்யசபாவின் கவுரவத்தை உயர்த்தும் என நம்புகிறேன்.இந்த முடிவுக்காக பிரதமர் மோடியையும், பாஜ பார்லி குழு உறுப்பினர்களையும் வாழ்த்துகிறேன்.https://x.com/AmitShah/status/1957116422644965429
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
துணை ஜனாதிபதி பதவிக்கான தேஜ கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். தற்போது மஹாராஷ்டிராவின் கவர்னராக இருந்த அவர், முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராக பணியாற்றினார். லோக்சபா எம்பியாகவும் பணியாற்றினார்.https://x.com/nsitharaman/status/1957096785677009105
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். பாஜ மூத்த தலைவரும், கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.https://x.com/EPSTamilNadu/status/1957107289435033611
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜ மூத்த தலைவர்களுக்கும் பாஜ தலைவர் நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜ தலைவராகவும், எம்பி ஆகவும், அவர் செய்த மக்கள் பணிகள், போற்றுதலுக்குரியவை. ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா மாநிலங்களின் கவர்னராகவும், வெகுசிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். https://x.com/annamalai_k/status/1957099927072571667துணை ஜனாதிபதியாக அவர் வெகு சிறப்பாக மாநிலங்களைவையும், நாட்டையும் வழிநடத்துவார் என்பது உறுதி. அவருக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டுக்கு ரெம்பநாள் கழித்து இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி கிடைத்துள்ளது. அதுவும் திருப்பூர் கொங்கு பகுதியில் அதிக மக்கள் வாழும் விவசாய மக்களின் ஒரு விவசாயி.