உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?

காசாவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுமா; அடுத்து என்ன நடக்கும்? மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேருமா என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படியான சூழலில் ஐ.நா.,வின் பொது சபை இம்மாதம் கூடுகிறது. எங்கே இந்த கேள்விகள் எல்லாம் சபையில் ஒலிக்குமோ என்ற அச்சத்தால், ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன தலைவர்களுக்கு விசா வழங்க மறுத்திருக்கிறது அமெரிக்கா. கடந்த 1988ல் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்துக்கும் இதே போல் அமெரிக்கா விசா வழங்க மறுத்தபோது, ஐ.நா., பொது சபையின் கூட்டம் ஜெனீவாவுக்கு மாற்றப்பட்டது. சர்வதேச சமூகத்துக்கு அப்போது இருந்த அதே துணிச்சல் இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கோரி, ஐ.நா.,வின் சர்வதேச உயர்நிலை கருத்தரங்கை கடந்த ஜூலை 28ல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட்டியிருந்தன. அது அர்த்தமற்ற நடவடிக்கையாகவே தோன்றுகிறது. ஏனெனில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகள் கூட, காசா போருக்கு பக்கபலமாகவே இருக்கின்றன. ஈரானின் அச்சுறுத்தல் மட்டுமே வளைகுடா நாடுகளின் கண்களுக்கு தெரிகிறது. அந்த அச்சுறுத்தலை களையவே, இஸ்ரேலுடன் இயல்பான உறவை பேண வளைகுடா நாடுகள் விரும்புகின்றன. இதற்காக அமெரிக்காவின் உதவியுடன், அப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இஸ்ரேலிடம் வளைகுடா நாடுகள் இணக்கமாகிவிட்டன. எனவே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பிரான்ஸ், பிரிட்டன் போன்ற சில ஐரோப்பிய நாடுகளின் முழக்கம் நிச்சயம் எடுபடாது. சில ஆண்டுகளுக்கு முன் கூட, ஒரு சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தன. அப்போது, முதல் நாடாக குரல் கொடுத்தது இந்தியா தான். ஆனால், இதுவரை அந்த குரல் எதிரொலிக்கவே இல்லை. தற்போது மேற்கு கரையில் பாலஸ்தீனர்களுக்கு மிகப் பெரிய பிரச்னை எழுந்திருக்கிறது. அது, இஸ்ரேல் நடத்தும் சட்டவிரோத குடியேற்றம். இஸ்ரேலில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயரும் யூதர்கள், அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் பாலஸ்தீனர்களை விரட்டி அடிக்கின்றனர். இதன் விளைவால் அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல், இதுவரை குறைந்தபட்சம் 964 பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த வன்முறைக்கு பாலஸ்தீன கிறிஸ்துவர்களும் தப்பவில்லை. காசாவில் உள்ள மிகப் பழமையான புனித போர்பைரஸ் கிறிஸ்துவ தேவலாயம் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 18 பாலஸ்தீன கிறிஸ்துவர்கள் உயிரிழந்தனர். அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்தையும் வன்முறையாளர்கள் விட்டு வைக்கவில்லை. பாலஸ்தீனர்கள் - இஸ்ரேலியர்கள் இடையே நடக்கும் போராட்டமே பாலஸ்தீன கொள்கை. ஆனால், அதை முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாக மடைமாற்றி மிகப் பெரிய தவறு இழைத்தது ஹமாஸ். அதனால், தனி நாடு என்ற கனவு, பாலஸ்தீனர்களுக்கு இதுவரை நனவாகவில்லை. ஒரு காலத்தில் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேலிய மக்களும் ஆதரவாகவே இருந்தனர். ஆனால், 2023, அக்., 7ம் தேதிக்கு பின் அது தலைகீழாக மாறிவிட்டது. அன்றைய தினம் ஹமாஸ் நடத்திய தாக்குதல், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்களுக்கு வெறுப்புணர்வை துாண்டிவிட்டது. தற்போது காற்று இஸ்ரேல் பக்கம் வீசுவதால், பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி தலைவர்கள், 2025 இறுதிக்குள் மேற்கு கரை தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டு விடும் என அடித்துக் கூறுகின்றனர். காசாவில் தினசரி பசி, பட்டினி, துயரம் என பல்வேறு கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. அதனால் சண்டை நிறுத்தம், பிணைக் கைதிகளை ஒப்படைப்பது, மனிதாபிமான உதவிகள் வழங்குவது, ஹமாஸிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பது, இடிந்து போன உள்கட்டமைப்பு மற்றும் வாழ்விடங்களை புனரமைப்பது போன்ற விஷயங்களில் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் இருக்கிறது. இதனால், தனி பாலஸ்தீன நாடு என்ற பேச்சுக்கே உலக நாடுகள் இடம் தரவில்லை. ஏனெனில், அமெரிக்காவின் உதவி இல்லாமல் அங்கு எதையும் செய்து விட முடியாது. அமெரிக்காவும் பாலஸ்தீனம் உதயமாக என்றுமே விடாது. இஸ்ரேலும் காசாவை தன் பிடியில் கொண்டு வருவதற்கான வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறது. இதனால், வரும் நாட்களில் ரத்தம் சிந்தி உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். காசாவை மனிதாபிமான நகரமாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவித்திருக்கிறது. காரணம் கேட்டால், பாலஸ்தீனர்கள் தங்குவதற்காக நகரை தயார்படுத்தி வருவதாக கூறுகிறது இஸ்ரேல். யூதர்கள் அல்லாதோருக்கு, யூதர்கள் உதவ முன் வருகின்றனர் என சொல்வது நிச்சயம் முரண்பாடானது. மேற்கு கரையில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகின்றன. அப்போது, மேற்கு கரையின் புவியியல் அமைப்பே முற்றிலும் மாறியிருக்கும். எனவே, தனி நாடு என்ற பாலஸ்தீனர்களின் கொள்கை மெல்ல நீர்த்துப் போகும். அதை, இந்த உலகமும் மவுன சாட்சியாக இருந்து வேடிக்கை பார்க்கும்டி.எஸ். திருமூர்த்தி ஐஎப்எஸ் (ஓய்வு) ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ManiMurugan Murugan
செப் 06, 2025 23:19

போர்களை நிறுத்தியதாக தம் பட்டம் அடிக்கும் அமெரிக்க அதிபர் பாலஸ்தீனர்களின் கோரிக்கையை ஏன் நிராகரிக்கிறது.தனி நாடு அமைவதை ஏன் இஸ்ரேல் அமெரிக்கா விரும்பவில்லை?பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஆதரிக்கும் நாடுகள் ஏன் பாலஸ்தீனியரை வஞ்சிக்கிறது. ஹமாஸை தூண்டிவிடுவதே அமெரிக்கா தானா?நல்ல முடிவு எட்டப்பட்ட வேண்டும்.உணவில்லாமல் சாவு என்பது உலகை பாதிக்கும் விஷயம் .வளர்ந்த நாடுகள் இத்தகைய கொடுரங்களை வளர்ப்பது தவறு .பிறகு எதற்கு ஐநா உலக நல சங்கம் எல்லாம்


தலைவன்
அக் 08, 2025 11:15

நல்ல மூச்சு பிடிக்க சாப்பிட்டு விட்டு?? பெயரளவுக்கு வெற்று கூச்சல் போட்டு விட்டு கலைந்து செல்வதுதான் ஐநா உலக நல சங்கம்


morlot
செப் 06, 2025 18:24

Netanyou must be killed because he is worser than hitler.He is killing babies children and old people. France and uk must show their power by using atom bombs on israel.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 06, 2025 14:45

முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் எண்ணம் கைவிட வேண்டும். வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களுடன் இணைந்து தாங்களும் முன்னேறும் வழி தேட வேண்டும். மதம் என்ற பெயரில் பழமைவாத சிந்தனைகள் விடுத்து காலத்திற்கேற்ப மாற வேண்டும். மற்ற மதத்தவர்கள் இனத்தவர்கள் மதித்து அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களோடு இணைந்து வாழ வேண்டும். இரண்டு பேரை நம்பி ஆரம்பித்த மதம் தற்போது நாற்பத்தெட்டு நாடுகளில் ஆட்சி மதமாக உள்ளது என்பது இறுமாப்பு கொள்கைகள் விட்டு விட்டு அவர்கள் நாடு அவர் அவர்கள் மதம் அவர் அவர்கள் எண்ணத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதம் போர் இவற்றால் மற்றவர்களை அடக்கி ஆளலாம் என்ற எண்ணத்தை முற்றிலும் விட்டு விட வேண்டும். இவைகளெல்லாம் நடக்குமா அந்த சமூகம் மனம் மாறுமா என்பது தெரியாது. ஆகவே அதுவரை இந்த இனப்போர் பயங்கரவாதம் தீவிரவாதம் உலகில் இருந்து மறைய போவது இல்லை. உலகில் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்து கொண்டு தான் இருக்கும். பயங்கரவாதம் தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் இருந்து நீங்க போவது இல்லை. தெரு நாய்களுக்கு ரேபீஸ் பிடித்து அப்பாவி மக்களை தாக்குவது போல் இந்த தீவிரவாதிகளும் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் அப்பாவி மக்களை தாக்கி கொண்டு தான் இருப்பார்கள். நாமும் நமது சந்ததியினரும் இந்த போர் தீவிரவாதத்தோடு வாழ பழகி கொள்ள வேண்டும்.


Rameshmoorthy
செப் 06, 2025 10:22

, thanks for few facts and why no write up on the compulsory release of hostages and it’s getting silent now a days and release only a solution to end war


Sankar Venugopal
செப் 06, 2025 09:55

Netanyahu and Trump agreed to kill and displace 1.5 million Palestnian from Gaza and near by Israrel border plastnian across borders World order may change Palestinian get their land back. It is only a matter time. For this cause some one in Palestine is already born. He will find a noble route to find solution.


D Natarajan
செப் 06, 2025 08:24

நாம் ஏன் கவலைப்பட வேண்டும். தேவையற்ற கருத்து. ஏன் ஒருவரும் ஹமாஸ் பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க சொல்ல மறுக்கிறார்கள். ஹமாஸ் ஒழிக்கப்பட வேண்டும். பிணைக் கைதிகள் விடுவிக்க படவேண்டும்


தலைவன்
அக் 08, 2025 11:19

மனிதர்கள் மனிதர்களை ,மனித நேயத்தை ஆதரிப்பார்கள்? யூதர்கள் பெறும் பகுதியினரே நெதன்யாகுவிற்கு எதிராக தெருவில் இறங்கி போராடுகின்றனர்??


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 06, 2025 07:51

அதெல்லாம் சரீ... இப்போ நீங்கள் என்ன சொல்ல வரீங்கள்?


தலைவன்
அக் 08, 2025 11:17

இஸ்ரேலியர்களுக்கு ஆதரவா பேசிகிட்டு திரியாதீங்கன்னு சொல்ல வர்ரார் .


முக்கிய வீடியோ