உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? கார்கே விளக்கம்

ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? கார்கே விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக வேறு வழியில்லாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறோம், '' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளின், ' இண்டியா ' கூட்டணி கொண்டு வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dg1ryjnt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக அக்கூட்டணி தலைவர்கள் டில்லியில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: ராஜ்யசபா அரசியல் ரீதியில் நடத்தப்படுகிறது. விதிகளின் படி செயல்படவில்லை. 1952 முதல் எந்த துணை ஜனாதிபதியும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால், அவர்களுக்கு எதிராக விதி எண் 67 ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. ஒரு தலைபட்சம், பாரபட்சம் காரணமாக தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டு உள்ளன. பதவி உயர்வுக்காக அரசின் செய்தித் தொடர்பாளர் போல் தன்கர் நடந்து கொள்கிறார். அவரின் நடவடிக்கைகள், அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்திற்கு மாறாக உள்ளது. எதிர்க்கட்சியை விமர்சிக்கும் அவர், அரசை புகழ்ந்து தள்ளுகிறார். வேறு வழியில்லாமல் இந்த நோட்டீசை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு எங்களை அவர் தள்ளியது கவலை அளிக்கிறது. எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் வாய்ப்புகளை அவர் விடவில்லை.நாட்டின் ஜனநாயக பெருமைகளை அவரின் நடவடிக்கைகள் கெடுத்துள்ளன. அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதமோ அல்லது அரசியல் ரீதியிலான மோதலோ இல்லை. தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்ளும் அவர், எங்களை மாணவர்கள் போல் நடத்துகிறார். தீவிர ஆலோசனைக்கு பிறகு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இவ்வாறு கார்கே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தத்வமசி
டிச 11, 2024 22:34

காங்கிரஸ் காரர்கள் உலகமகா நடிகர்கள். யாரோ ஆட்டுவிக்க இந்தியாவில் ஆடுவார்கள். நாட்டைப் பற்றிய அக்கறை துளியும் கிடையாது. ஆட்சி கிடைக்கும் போது சரியாக ஆள்வது கிடையாது. ஊழல், ஊழல், ஊழல், எல்லா இடங்களிலும் கடன் வாங்க வேண்டியது, ஊழல் செய்ய வேண்டியது. எதிர்கட்சியாக இருக்கும் போது எவனோ கொடுக்கும் சாவிக்கு ஆடவேண்டியது. மொத்தத்தில் சொந்த புத்தி கிடையாது.


S.Senthilkumar
டிச 11, 2024 20:32

unnecessary blaming culture like childish by opposition parties It seems organized agenda politics has arranged not to run the lower and upper house waste of time and money


Sivagiri
டிச 11, 2024 19:38

இண்டி கும்பலில் ,, தாங்கள்தான் பெரிய அப்பாடக்கர் , என்று காட்டுவதற்காகத்தான் தவிர , வேறு எந்த புண்ணாக்கும் இல்லை -


ManiK
டிச 11, 2024 18:58

பொரம்போக்கு கட்சிக்கு இவ்ளோ உணர்ச்சியுடன் நடிக்கிராரே இந்த ஆளு. வரலாறு என்றால் என்னதுன்னு தெரியுமா இந்தாளுக்கு?! ஜக்தீப் ரொம்ப friendlyயா இடம் கொடுத்தது தப்பாபோச்சு.


Ramalingam Shanmugam
டிச 11, 2024 18:16

உன் சொத்துக்களை பொதுவில் வை கொள்ளை அடித்தவை


SVR
டிச 11, 2024 17:52

அபத்தமா பேசுகிறார். மத்தியில் ஆளும் என் டி ஏ தன்கர் மேல் நம்பிக்கை உள்ளது என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை நிறை வேற்ற வேண்டும். பிறகு இந்த கிழவரையும் இண்டி காரர்களையும் அவையிலிருந்து காலவரையின்றி நீக்க வேண்டும். இந்த இண்டி காரர்கள் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இவர்கள் நாட்டை துண்டாட விரும்பும் கோடாரிகள். இந்த நாட்டு மக்கள் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு வோட்டு போடாமல் இருந்தால் அது மிக நல்லது.


என்றும் இந்தியன்
டிச 11, 2024 17:35

மிகச்சரியான தீர்மானம் என்றே வைத்துக்கொள்வோம் அதனால் என்ன நடக்கும்????இண்டி கஸ்மால கூட்டணி நாடாளுமன்றத்தில் மக்களின் தேவை அறிந்து அவர்கள் வாழ்வு வளம் பெற நல்ல தீர்மானம் கொண்டு வருமா ???ஒழுங்காக ஒரு தடையுமில்லாமால் நாடாளுமன்றம் நடக்க இண்டி கூட்டணி எல்லாவித நடவடிக்கை எடுக்குமா??? இல்லையல்லவா???அப்போ கார்கே முன்னாடி பின்னாடி மூடிக்கொண்டு நாடாளுமன்ற்ம் சென்று நல்ல பணி செய்வாய்???


Shekar
டிச 11, 2024 17:32

ஹமீத் அன்சாரி போல ஒரு காங்கிரஸ் அடிமையை இந்த கொத்தடிமை கூட்டம் எதிர்பார்க்கிறது.


சாண்டில்யன்
டிச 11, 2024 18:28

அதானி வழக்கு பற்றித்தான் பேச அனுமதி இல்லையாம் பலநாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் படுகிறது ஆனால் சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு அனுமதி அளித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மறுக்க முடியுமா? ஒரு கொத்தடிமையை பிஜேபி இந்த பதவியில் அமர்த்தியுள்ளது என்பதே சரி


Dharmavaan
டிச 11, 2024 18:50

அன்சாரி ஜிகாதி தீவிரவாதி


Ganapathy
டிச 11, 2024 20:36

மக்கள் வரியில் அதாவது முஸ்லீம் பப்பூ வெறுக்கும் ஸனாதன மக்களின் வரியில் இவன் சென்ற உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன விஜயத்தையும் அதுவும் எம்பியாக அவனும் அவனது ஆத்மாவும் சென்ற ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தையும் விவாதிக்கவேண்டும்.


nv
டிச 11, 2024 17:20

மீண்டும் மீண்டும் அதே தவறான முடிவு காங்கிரெஸ் எடுக்கிறது. தோல்வி என்று தெரிந்தும் இப்படிபட்ட முடிவுகளில் காலை விட்டு பின்னர் அலறுவது வாடிக்கை ஆகிவிட்டது.. 89 தோல்வியை சந்தித்த ராகுல் இன்னும் ஒரு தோல்வியை சந்தி்த்து 90 முறை தோற்ற மகா சூரன் என்று மக்களால் போட்ர படுவார்


முக்கிய வீடியோ