உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன். இனி கூட்டணி மாற மாட்டேன்'' என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.பீஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பீஹார் முதல்வராக நிதீஷ் குமார் உள்ளார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்க உதவிய இண்டி கூட்டணியைக் கைவிட்டு, நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பினார்.இந்நிலையில், பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன், இனி கூட்டணி மாற மாட்டேன். எப்போதும் இங்கேயே இருப்பேன். எனது கட்சி என்னை இரண்டு முறை இங்கும் அங்கும் செல்ல வைத்தது. ஆனால் இது மீண்டும் நடக்காது. என்னை (முதல்வராக) ஆக்கியது யார்? அது வாஜ்பாய்தான். இவ்வாறு அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் பல முறை கூட்டாளிகளை மாற்றிக் கொண்ட, மிக நீண்ட காலம் முதல்வராக இருக்கிறார் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 05, 2025 16:34

1. 3-12-2024 தேதியிட்ட செய்தியின்படி,7 IIM களில் 256 ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களில் ஓபிசிகளுக்கான 88 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2. அதுபோலவே 11 IIT களில் ஒபிஸிகளுக்கான 415 பணியிடங்கள் உள்ளிட்ட 1557 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 3. RTI தகவலின்படி,2 IIT களிலும் 3 IIM களிலும் 90% க்கும் அதிகமான பொதுப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4. 6 IIT களிலும் 4 IIM களிலும் 80-90% பொதுப்பிரிவு ஆசிரியர்களே பணியில் அமர்ந்துள்ளனர். 5. இந்தூர் IIM இல் 97.2% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர்.உதயப்பூர் ,லக்னோ IIM களில் 90% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர். 6. பெங்களூர் IIM இல் 85% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர்.பம்பாய் ,கரக்பூர்,காந்திநகர்,கான்பூர்,கவுகாத்தி IIT களில் 80-90% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர். 7. 13 IIM களில் ஓபிசி ஆசிரியர்கள் 9.6% அளவில் மட்டுமே உள்ளனர். 8. 21 IIT களில் ஓபிசி ஆசிரியர்கள் 11.2 % அளவே உள்ளனர். 9. சில IIT,IIM களில் இடஒதுக்கீடு கொள்கை ஓரளவு கடைபிடிக்கப்பட்டு உள்ளது. 10. பாட்னா IIT யில் மட்டும் 38% ஓபிசி ஆசிரியர்கள் உள்ளனர். 11. பிலாய் மற்றும் இந்தூர் IIT களில் பொதுப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் 50% மட்டுமே உள்ளனர். 12. ஜம்மு IIM இல் ஓபிசி ஆசிரியர்கள் 23% உள்ளனர். 13. ஓபிசி பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டை பெரும்பாலான IIT கள் IIM கள் பல ஆண்டுகளாக பின்பற்றவில்லை என்ற புகார்கள் ஒன்றிய அரசின் கல்வித்துறைக்கு பலமுறை அனுப்பப்பட்டுள்ளன. 14. ஓபிசி வகுப்பை சேர்ந்த பிரதமர் மோடி இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்பதே உண்மை நிலையாகும்.


ஆரூர் ரங்
மே 05, 2025 19:56

சரி. அன்றாட ம் சமூகநீதி பேசும் திராவிஷக்கட்சிகள் ஒரு பட்டியலினத்தாரை எப்போ முதல்வராக ஆக்கும்?


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 06, 2025 06:44

ஒரு பட்டியலினத்தவரை ஒரு பின்தங்கிய வகுப்பினரை தலைமைப் பொறுப்பில் அமர வைத்தும் எந்த பயனும் விளையவில்லை அவர்கள் மேல்சாதியினருக்கு அடிமைகளாகவே தொடர்கிறார்கள் என்றுதான் எனது பதினாலாவது எண்ணிட்ட உண்மை நிலை. தோல் பாவை கூத்துதான் ஆட்டுவிப்பவன் திரை மறைவில். இந்த நாடகம் வேண்டாம்.


naranam
மே 05, 2025 15:37

நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் பல்டி வரலாறு அப்படிப் பட்டது..


Sridhar
மே 05, 2025 13:14

யாரேனும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றாரா, இல்ல தானாவே திரும்ப திரும்ப சொல்றாரானு தெரியல. பாவம் அவருக்கு உடல்நலம் சரியா இல்லனு வேற சொல்றாங்க. சீக்கிரமே ஒதுங்கி நின்று இளைஞர்களுக்கு வழிவிட்டா நல்லது.


Nallavan
மே 05, 2025 11:31

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்


MARUTHU PANDIAR
மே 05, 2025 11:01

ஊழல் லாலுவின் பொல்லாத மகன் இவரை அன்றாடம் திட்டுகிறான். இந்த ஆளுக்கு வேறு எங்கும் போக்கிடம் இல்லை. போனால் சீந்துவாருமில்லை. இங்கு இருந்தால் கொஞ்சம் கவுரவத்தை எதிர்காலத்தில் காப்பாற்றிக் கொள்ளலாம்.


புதிய வீடியோ