உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரஹலட்சுமி பணத்தில் சுயதொழில் துவங்கிய பெண்

கிரஹலட்சுமி பணத்தில் சுயதொழில் துவங்கிய பெண்

பெலகாவி; 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் பணத்தை சேமித்து வைத்த குடும்பத்தலைவி ஒருவர், அந்த பணத்தை பயன்படுத்தி சுய தொழில் துவங்கியுள்ளார். இவரை மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வாழ்த்தினார்.முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, செயல்படுத்திய வாக்குறுதித் திட்டங்களில், 'கிரஹ லட்சுமி' திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ், குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த பணத்தை பலரும், நல்லமுறையில் பயன்படுத்துகின்றனர்.பெரும்பாலான பெண்கள், கிரஹலட்சுமி பணத்தை சேமித்து, வாஷிங் மெஷின், குளிர்ச்சாதன பெட்டி, மிக்சி என, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். மற்றொருவர் தன் மகனுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார்.பெலகாவியின், குகடொல்லி கிராமத்தில் வசிப்பவர் தாயவ்வா. இவர் தனக்கு கிடைத்த கிரஹலட்சுமி பணத்தை சேமித்து வைத்தார். மிளகாய் பொடி அரைக்கும் இயந்திரம் வாங்கி, சுய தொழில் துவங்கி உள்ளார். இந்த இயந்திரத்தை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், நேற்று திறந்து வைத்து தாயவ்வாவை வாழ்த்தினார்.மாநில அரசின், கிரஹ லட்சுமி திட்டம், ஏழை குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. திட்டத்தின் பணத்தை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. மிர்சி மிக்சர் மெஷின் வாங்கி, சுய தொழில் துவங்கிய தாயவ்வாவை வாழ்த்துகிறேன்.- லட்சுமி ஹெப்பால்கர், அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை