உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. தனக்கு எதிரான உள் விசாரணையின் சட்டப்பூர்வ செல்லுபடியை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று (ஜூலை 30) நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வர்மாவின் வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன் வைத்தார். அவர், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரி விசாரணை குழு பரிந்துரைந்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்டார். அப்போது, நீதிபதி வர்மாவின் நடத்தை குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.நீதிபதி வர்மாவிடம், அவர் ஏன் உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி, அவ்வப்போது அதை எதிர்க்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள் விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா முன்னதாகவே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.இதையடுத்து, உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் தீர்ப்பை தள்ளி வைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Iyer
ஜூலை 30, 2025 19:57

 ஒரு SC நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிக்கப்படுகிறது.  ஒரு வாரத்துக்குமேல் இந்த செய்தி வெளிவராமல் மூடி மறைக்கப்படுகிறது.  செய்தி வெளிவந்த பிறகும் அவரை - நீதித்துறை வேலைகளில் இருந்து விடுவிக்காமல் - SC அவரை TRANSFER செய்கிறது.  நமது SC ல் உடனே - கூண்டோடு எல்லா நீதிபதிகளையும் வேலை நீக்கம் செய்து - புது நீதிபதிகளை நியமனம் செய்யவேண்டும்.  யஸ்வந்த் வர்மா வழக்கை OPEN TRIAL முறையில் நாடே காணும் படி நடத்தவேண்டும்.  இல்லாவிடில் நீதித்துறை இழந்த நம்பிக்கையை மீட்ட முடியாது.  இதே நிகழ்ச்சி நமது சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தில் நடந்திருந்தால் - இதுவரை அந்த நீதிபதி தண்டிக்கப்பட்டிருப்பார்


rama adhavan
ஜூலை 30, 2025 22:10

ஏன் ஆதாரமின்றி சம்பந்தம் இல்லாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். இவரின் மெய்யான நோக்கம் தான் என்ன? ஓ அவரா இவர்.


Iyer
ஜூலை 30, 2025 19:45

சட்ட திருத்தும் உடனே தேவை. ஒரு நீதிபதி கொலை செய்தாலோ, பாலியல் குற்றம் செய்தாலோ அவரை வேலை நீக்கம் செய்ய முடியாதா?


MUTHU
ஜூலை 30, 2025 19:37

நாட்டின் இறையாண்மை கெடுக்கும் வக்கீல் இவர். இவரைத்தான் சோனியா காங்கிரஸ் தனது ஆட்சியில் சட்ட அமைச்சராய் வைத்திருந்தது.


R. THIAGARAJAN
ஜூலை 30, 2025 19:31

In india the utmost Trust and Belief are only from our HONOURABLE COURTS IT MUST BE UPHOLDING WITH THEIR RESPECTABLE JUDGEMENTS. IF ITS DELAYING WILL CREATES SO MANY DOUBTS. WAY BAY TO FEW DECADES RAMJETH MALANI WAS INTRUST WITH THE CASES ONLY AGAINST LAW. NOW THE OPPONENT ADVOCATE WORKING FOR WEALTHY AND MISUSING THEIR OFFICEIAL POWER OFFENDERS.


sankaranarayanan
ஜூலை 30, 2025 19:02

கொலை செய்தவனுக்கும்,திருட்டு தொழிலை கையிலேந்தியவனுக்குமே அரசியலில் தில்லு முல்லு செய்தவனுக்குமே இந்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன் வைப்பார்.அப்போதுதான் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் இப்படியும் சில வழக்கறிஞர்கள் நாட்டிலே உலா வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


என்றும் இந்தியன்
ஜூலை 30, 2025 17:50

இதை விட நீதிமன்றம் இந்த உலகத்திலியே இல்லவே இல்லை. குற்றம் செய்தது அநீதிபதி என்றால் தண்டனையை அறிவிக்காமல் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்குமாம் நீதிமன்றம்


K.Ravi Chandran, Pudukkottai
ஜூலை 30, 2025 17:13

50 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு கடை நிலை அரசு ஊழியர் மீது உடனடி நடவடிக்கை மேற் கொள்ளும் இந்திய நீதி பரி பாலனம் ஒரு நீதிபதி குற்றம் செய்ததாக அதற்கான ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும் தவறு செய்ததாக கூறப்படுபவற்கு அட்வைஸ் வழங்கி கொண்டிருக்கிறது. வாழ்க இந்திய நீதி பரிபாலனம்.


அசோகன்
ஜூலை 30, 2025 17:03

அரக்க இனத்தை சேர்த்தவனா இவ... ன்..... எல்லாம் கொலைகாரன் கொள்ளைகாரனுக்கும் அஜராக்கிறான்......... உச்சநீதி மன்றத்திற்கு நம்பிக்கை வரவில்லையா...? கண் முன்னே டன் கணக்கில் ரூபாய் நோட்டுகள்......


D.Ambujavalli
ஜூலை 30, 2025 16:51

இதே ஒரு சாமானியன் அல்லது கிராம அதிகாரி வீட்டில் சட்ட விரோதமாக சில லட்சங்கள் கண்டுபிடித்தால் வ . வரி, அ . ஆ எல்லாம் வளைத்துப் பிடித்து உள்ளே தள்ளியிருப்பார்கள் நீதிபதியாச்சே, அவர் வாக்குக்கு அவ்வளவு மதிப்புக்கொடுத்து சொல்வதற்கு காது கொடுக்கிறார்கள் எத்தனை நீதிபதிகளுக்கு வயிற்றைக் கலக்குகிறதோ?


Narayanan
ஜூலை 30, 2025 16:47

காசுகொடுத்தால் கபில்சிபில் எதற்கும் வாதாடுவார் . அவர் மூத்த வழக்கறிஞர் , வழக்கறிஞர் சங்க தலைவர் என்பதால் நீதிபதிகள் மரியாதை நிமித்தம் அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி அவரை பெரிய ஆளாக்கி விட்டார்கள் . அவரும் பணம் பார்க்கிறார் . இதில் வேடிக்கை என்ன என்றால் "உங்கள் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை" என்றவர்கள் உடனடியாகவே தீர்ப்பை வழங்கி இருக்கவேண்டுமே ஆக அவர்களும் எதையோ எதிர்பார்க்கின்றனர். பார்போம் . இவர்கள்தான் நீதி தேவதை கண்களில் கருப்புத்துணியை கட்டிவிட்டார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை