மீனாட்சி உயர் கல்வி நிறுவனம்: புதிய வேந்தர் பதவியேற்பு
சென்னை: மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய வேந்தராக ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் இந்நிறுவனத்தின் சார்பு வேந்தராக ஆகாஷ் பிரபாகர் பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் ஜே.பி மோர்கன் சேஸ் அண்ட் கோ.வின் நிர்வாக இயக்குநர் பிரபாகர் எட்வர்ட், ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நவீன் ராகேஷ், மீனாட்சி அம்மாள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கோகுல், நிறுவன வேந்தர் ஏ.என். ராதாகிருஷ்ணன் பதிவாளர் பேராசிரியர் டாக்டர் சுரேகா வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.