உள்ளூர் செய்திகள்

தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடில்லி: திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது.விருதாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை, டில்லியில் நடக்க உள்ள விழாவில் வழங்கப்படும். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் வெளியானது. திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908 என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.புத்தகம் பற்றி1908 மார்ச் 13ல் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆங்கிலேய அரசு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது.அதற்கு முன்போ பின்போ சுதந்திர போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.முதல்வர் வாழ்த்துமுதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam நூலை ஏஆர் வெங்கடாசலபதி கொண்டு வந்துள்ள வேளையில், அவரது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 நூல் SahityaAkademi விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது! கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் எழுச்சி எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதிக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்