உள்ளூர் செய்திகள்

போலி சான்றிதழுடன் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவி, பெற்றோருடன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரியில் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவப்படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவி, உடந்தையாக செயல்பட்ட அவரது தாய், தந்தை என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்தவர் சொக்கநாதர் 55. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நில அளவையராக உள்ளார். இவரது மனைவி விஜய முருகேஸ்வரி 47. மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி 19. பிளஸ் 2 படித்து முடித்த இவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார்.சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 228 மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றார். முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் சீட் கிடைக்கவில்லை.விரக்தியடைந்த அவர் எப்படியாவது மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 456 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்ததுடன் கவுன்சிலிங்கில் திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரியில் மருத்துவ இடஒதுக்கீடு கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாக தயாரித்து அட்மிஷனுக்கு பெற்றோருடன் வந்தார். அங்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது.மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கை விவரங்கள் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த சரிபார்ப்பு பணியில் காருண்யா ஸ்ரீவர்ஷினி நீட் தேர்ச்சி, கவுன்சிலிங் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை போலியாக தயாரித்துக் கொடுத்து மருத்துப்படிப்பில் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் வீரமணி, எஸ்.பி., பிரதீப்பிடம் கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி காருண்யா ஸ்ரீவர்ஷினி, அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை சொக்கநாதர், தாய் விஜய முருகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்