உடுமலை ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர் வெள்ளம்!
தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறை குறித்து ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தினமலர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்நிகழ்ச்சி, உடுமலை ஜி.வி.ஜி., கலை அரங்கில் இன்று (15ம் தேதி) நடந்தது. தினமலர் டி.வி.ஆர்., அகாடமி, கல்வி மலர் மற்றும் புரபசனல் எஜூகேசனல் டிரஸ்ட், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9.00 மணிக்கும், ஆங்கில வழி மாணவர்களுக்கு பகல் 12.30 மணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு, கோவை, பீளமேடு சர்வஜனா மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பங்கஜம், ஆங்கிலம் - மெகருநிஷா, கணிதம் - பாலசுப்ரமணியம், அறிவியல் - மீனலோசினி, சமூக அறிவியல் - மஞ்சுளா உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினர். ஆங்கில வழி மாணவர்களுக்கு, கோவை பீளமேடு நேஷனல் மாடல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பாரதி, ஆங்கிலம் - சிந்தியா, கணிதம் - சரவணன், அறிவியல் 1 - ப்ரியா, அறிவியல் 2 - ஹேமலதா, சமூக அறிவியல் - பத்மாவதி ஆலோசனை அளித்தனர். தேர்வில் முழு மதிப்பெண் பெறுவதற்கான அனைத்து வழிமுறை குறித்தும் ஆசிரியர்கள் குறிப்பு வழங்கினர். தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து ஆலோசனை நல்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்களை உள்ளடக்கிய "ப்ளூ பிரின்ட்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற உடுமலை சீனிவாசா வித்யாலயா பள்ளி மாணவி மாலினிக்கு, தினமலர் டி.வி.ஆர். அகாடமி சார்பில், பதக்கம் வழங்கப்பட்டது. நாளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி, நாளை (நவ., 16) நடக்கிறது. கோவை சர்வஜனா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - ரஞ்சிதம், ஆங்கிலம் - சாந்தா, கணிதம் - தட்சிணாமூர்த்தி, இயற்பியல் - சங்கர் கணேஷ், வேதியியல் - சிவக்குமார், உயிரியல் - ஸ்ரீசுதா, கணக்கு பதிவியல், வணிகவியல் - விஜயலட்சுமி, பொருளியல் - வித்யா, கம்ப்யூட்டர் சயின்ஸ் - வடகோவை கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்வாணி உள்ளிட்டோர் அறிவுரை வழங்குகின்றனர். மாணவர்களின் பேராதரவில் கூடலூர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி! கூடலூர் நர்த்தகி அரங்கத்தில், இன்று(நவம்பர் 15) நடைபெற்ற, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியிலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் ஏராளமாக திரண்டு வந்து, ஆர்வத்துடன் கலந்துகொண்டு, ஆலோசனைகளை கவனத்துடன் கேட்டறிந்து பயன்பெற்றனர்.