பள்ளி விடுதி பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
நாமக்கல்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின், நாமக்கல் மாவட்ட பள்ளி விடுதி பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அங்கமுத்து, அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் பணிபுரியும் சமையலர் மற்றும் காவலர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்தில் காஸ் இணைப்பு இல்லாத விடுதிகளுக்கு காஸ் இணைப்பு வழங்க வேண்டும். காலியாக உள்ள சமையலர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.