நீட் தேர்வில் பெருந்துறை சாகர் அகடமி சிறப்பிடம்
நீட் ரீப்பிட்டர்ஸ் பிரிவில், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் மெளனிஷ் நந்தா 696 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 600 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனர்.பள்ளி தாளாளர் செளந்திரராசன் கூறுகையில், தேர்வு எழுதிய மாணவர்கள், 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 50 சதவீதம் பேர் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர தகுதி பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 675 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கல்வி கட்டணத்தை, பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்றார். வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் செளந்திரராசன், கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி, முதல்வர் ஷுஜா, பள்ளி பொருளாளர் பழனிசாமி, இணை செயலாளர் சாமிநாதன், துணைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.