உள்ளூர் செய்திகள்

ஜே.இ.இ. முதன்மை தேர்வு : மாணவர் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதல்கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு வரும், 2026 ஜன. 21 முதல் 30 வரை நடக்கவுள்ளது.ஐ.ஐ.டி. - என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.தேசிய தேர்வுகள் முகமை, 2026 - 27 கல்வியாண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வை ஜன. மற்றும் ஏப். மாதங்களில் நடத்த உள்ளது. முதல் கட்ட முதன்மைத் தேர்வு 2026 ஜன. 21 முதல் 30ம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு துவங்கி நடந்து வருகிறது. https://jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 011 40759000 என்ற எண்ணில் விபரம் அறியலாம். இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு ஏப். 1 - 10 தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்