உள்ளூர் செய்திகள்

கலசலிங்கம் பார்மசி கல்லுாரியில் மருந்து வடிவமைப்பு பயிலரங்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் அடுத்த தலைமுறை மருந்து வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு, மூலக்கூறு இருப்பு , நெட்வொர்க் மருந்துகள் தலைப்பில் தேசிய பயிற்சி பயிலரங்கம் நடந்தது. தாளாளர் டாக்டர் அறிவழகி, செயலாளர் சசி ஆனந்த், அர்ஜுன் கல்சலிங்கம் தலைமை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.திருச்சி அண்ணா பல்கலை மருந்து மேம்பாட்டு குழு ஆராய்ச்சியாளர் புரட்சிக்கோடி பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். சென்னை நாட் ஜெனிகா பயோடெக் கம்பெனி நிறுவனர் சேஷன் குணாளன், எஸ்.ஆர்.எம்., மருந்தியல் கல்லூரி பேராசிரியர் கதிரவன், நந்தா மருந்தில் கல்லூரி பேராசிரியர் பிரபா, விஞ்ஞானி கனல் இளம்பரிதி பேசினர். பேராசிரியர் வினோத் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்