உள்ளூர் செய்திகள்

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

குளித்தலை: குளித்தலை அடுத்த நெய்தலூர் பஞ்சாயத்து, கட்டாணி மேடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தோகைமலை வட்டார கல்வி அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசுயா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். தமிழ்நாடு அரசு நடத்திய கலைத் திருவிழா ஓவிய போட்டியில், கட்டாணிமேடு அரசு தொடக்கப் பள்ளி மாணவி மதுஷி வெற்றி பெற்று முதல் இடத்தையும், சிவன்யா 2ம் இடத்தையும் பெற்றதையொட்டி, பள்ளி சார்பாக பரிசு வழங்கப்பட்டது.இதே போல் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்