பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்
திருப்பூர்: அவிநாசி பழனியப்பா இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள், 2026ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மத்திய அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று அவிநாசி தாலுகாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவி தன்ய ஸ்ரீ 500க்கு 488 மதிப்பெண்கள் (ஆங்கிலம் - 97, தமிழ் - 97, கணிதம் - 93, அறிவியல் - 97, சமூக அறிவியல் - 100) பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி தாரிகா 487 மதிப்பெண்களுடன் (ஆங்கிலம் - 90, தமிழ் - 98, கணிதம் - 93, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 99) இரண்டாம் இடத்தையும், விப்ரஜா ஷக்தி 484 மதிப்பெண்களுடன் (ஆங்கிலம் - 97, தமிழ் - 97, கணிதம் - 93, அறிவியல் - 95, சமூக அறிவியல் - 97) மூன்றாம் இடத்தையும், காவியா 483 மதிப்பெண்களுடன் (ஆங்கிலம் - 97, தமிழ் - 93, கணிதம் - 87, அறிவியல் - 94, சமூக அறிவியல் - 100) நான்காம் இடத்தையும் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், நிர்வாக இயக்குனர் பிரகாஷ், கல்வித் திட்ட இயக்குனர் சதீஷ்குமார், முதல்வர் அருணாச்சலம் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து பாராட்டினர்.