அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு சிறப்புப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.இது குறித்து, கலெக்டர் மாலதி ஹேலன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் சானடோரியம் பகுதியில், அரசு செவித்திறன் குறை உள்ளோருக்கான நடுநிலைப் பள்ளி மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள், இயங்கி வருகின்றன. இங்கு, 2026 - 27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, தற்போது நடந்து வருகிறது.அரசு சிறப்புப் பள்ளிகளில் சேர்த்து, உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பாக உருவாக்குங்கள். மேலும் விவரங்களுக்கு, தலைமையாசிரியர் 94863 25263, திட்ட அலுவலர் 95825 95778 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.